தாய்லாந்தில் கோட்டாபய எத்தனை நாள் தங்குவார்? வெளியான விவரம்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகஸ்ட் 11-ஆம் திகதி சிங்கப்பூரிலிருந்து தாய்லந்து சென்றார்.
தாய்லாந்தில் அவர் தற்காலிகமாக தாங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் 90 நாட்கள் தற்காலிகமாக தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவர் ஆகஸ்ட் 11-ஆம் திகதி, வியாழக்கிழமை சிங்கப்பூரிலிருந்து தந்து மனைவியுடன் தாய்லந்து சென்றார்.
அத்தகு முன்பாக, புதன்கிழமை (ஆகஸ்ட் 10) தாய்லாந்தின் பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சா இந்த விஷயத்தை மனிதாபிமான பிரச்சினை என்று கூறினார், தாய்லாந்தில் இருக்கும் போது ராஜபக்ச எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் பங்கேற்க முடியாது என்று கூறினார்.
இதற்கிடையில், ராஜபக்சேவின் தாய்லாந்து பயணத்தை இலங்கை அரசு ஆதரிப்பதாகக் கூறிய வெளியுறவு அமைச்சர் டான் பிரமுத்வினாய், முன்னாள் அதிபரின் இராஜதந்திர பாஸ்போர்ட் அவரை 90 நாட்கள் தங்க அனுமதிக்கும் என்றும் கூறினார்.