இவருக்கு 10-க்கு 9 மதிப்பெண் கொடுப்பேன்! இந்திய வீரரை பார்த்து மிரண்டு போயிருக்கும் கிரீம் ஸ்வான்
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கிரீம் ஸ்வான், இளம் வீரர் ருத்ராஜ் கெய்க்வாட்டை புகழ்ந்து பேசியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில், டோனி தலைமையிலான சென்னை அணி தொடரைக் கைப்பற்றியது. இந்த தொடரில், சென்னை அணியின் இளம் வீரரான ருத்ராஜ் கெய்க்வாட் 16 போட்டிகளில் 635 ஓட்டங்கள் குவித்தார்.
இதன் பயனாக இவர் தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில், இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்.
இந்நிலையில், இவர் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான கிரீம் ஸ்வான் கூறுகையில், சென்னை அணிக்காக விளையாடி வரும் ருத்ராஜ் கெய்க்வாட்டை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சிறந்த வீரராக வருவார் என்று மைக்கல் ஹஸ்ஸி அப்போது என்னிடம் கூறினார்.
இப்போது அவர் சொல்வது போன்றே நடக்கிறது. அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் அவர் ஆடிய விதங்களை பார்க்கும் நான் 10-க்கும் 9 மதிப்பெண் கொடுப்பேன்.
இவரைத் தொடர்ந்து இந்திய அணி ஸ்ரேயாஸ் அய்யர் சிறப்பாக விளையாடி வருகிறார். ஒரு சில தவறுகள் மட்டுமே அவரிடம் உள்ளன.
அதை திருத்திக் கொண்டால் அவரும் நல்ல வீரராக வருவார், இவருக்கு 10-க்கு 8 மதிப்பெண்ணும், இவர் இந்திய அணிக்கு 4-வது இடத்தில் களம் இறங்கினால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார்.