பிரித்தானிய மக்களை மொத்தமாக உலுக்கிய ஒற்றைப் புகைப்படம்: இப்படி ஒரு நிலை வேண்டாம் என பதறும் தேசம்
பிரித்தானியாவில் ஆம்புலன்ஸ் சேவை வேலை நிறுத்தம் தொடங்கியுள்ள நெருக்கடியான சூழலில் 93 வயதான பெண்மணி ஒருவருக்கு ஏற்பட்ட துயரம் மொத்த நாட்டு மக்களையும் உலுக்கியுள்ளது.
இடுப்பு எலும்பில் காயம்
பிரித்தானியாவில் முதியோர் காப்பகம் ஒன்றில் தங்கியிருந்தார் 93 வயதான எலிசபெத் டேவிஸ். இந்த நிலையில் அவருக்கு இடுப்பு எலும்பில் காயம் ஏற்பட நகர முடியாமல் ஒருநாள் முழுவதும் வலியால் துடித்துள்ளார்.
Credit: Daily Post Wales
ஆனால் ஆம்புலன்ஸ் சேவை வேலை நிறுத்தம் என்பதால், அவரை மருத்துவமனையில் சேர்ப்பிக்க முடியாமல் போயுள்ளது. மட்டுமின்றி, 25 மணி நேரம் அளவுக்கு அவர் தரையில் படுத்து,, அந்த தள்ளாத வயதில் மொத்த வலியையும் அனுபவித்துள்ளார்.
@AFP
டேவிஸ் மட்டுமின்றி, அவரைப் போன்று வயதானவர்களும், அவசர சிகிச்சை நாடுவோரும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை தலைவர்கள் மக்களுக்கு விடுத்த வேண்டுகோளில்,
ஆம்புலஸ் சேவை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள இந்த நெருக்கடியான சூழலில் மக்கள் ஆபத்தில் சிக்க வேண்டாம் எனவும், தொழிற்சங்கங்களால் நோயாளிகளின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Detty
மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆம்புலன்ஸ் சேவையை மறுக்கும் ஆபத்தான போக்கு இருப்பதாக கூறப்படுகிறது. எலிசபெத் டேவிஸ் என்ற அந்த முதியவர் தாம் தங்கியிருந்த காப்பகத்தில் சனிக்கிழமை பகல் தவறிவிழுந்து இடுப்பில் காயம் பட்டுள்ளார்.
ஆம்புலன்ஸ் சேவை
ஆனால் அவருக்கு ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்கு மேல தான் மருத்துவமனை செல்லும் வகையில் ஆம்புலன்ஸ் சேவை கிடைத்துள்ளது. மேலும், படுக்கை ஒன்றிற்காக இன்னொரு 12 மணி நேரம் அவர் மருத்துவமனயில் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த அன்று டேவிஸின் மகனும் அந்த காப்பக நிர்வாகமும் குறைந்தது 10 முறை ஆம்புலஸ் சேவைக்காக தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளனர். தரையில் படுத்துக் கொண்டு, வலியில் அவதிப்படும் டேவிஸை பார்க்கவே பரிதாபமாக இருந்து என குடும்ப உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே, குளிர்காலம் என்பதால் அந்த அழுத்தம், அதிகமானோருக்கு சேவை தேவை என்ற நிலை மற்றும் ஊழியர்களின் பற்றாக்குறை என பல காரணங்களால் உரிய நேரத்தில் சேவையை அளிக்க முடியவில்லை என ஆம்புலன்ஸ் சேவை நிர்வாகம் மன்னிப்புக் கோரியுள்ளது.