நடுக்கடலில் புலம்பெயர் மக்களுக்கு நேர்ந்த துயரம்... இன்னும் 500 பேர்கள் கொத்தாக மாயம்
கிரீஸ் கடற்பகுதியில் மூழ்கிய புலம்பெயர்ந்தோர் படகில் இருந்து இன்னும் 500 பேர்கள் வரை காணாமல் போயுள்ளதாக ஐநா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பெண்கள் மற்றும் சிறார்கள்
78 பேர்கள் மரணமடைந்த அந்த மோசமான விபத்தில், மாயமானவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறார்கள் என்றே கூறப்படுகிறது. இந்த இழப்புக்கு காரணமானவர்களை நீதிக்கு முன் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது வலுத்துள்ளது.
@bbc
750 பேரை ஏற்றிச் சென்ற அந்த மீன்பிடி படகு தெற்கு கிரீஸில் உள்ள பைலோஸ் என்ற இடத்தில் இருந்து 50 கடல் மைல் தொலைவில் விபத்தில் சிக்கியுள்ளது. இதில் 78 பேர்களின் சடலம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் முறையான விசாரணை முன்னெடுக்கப்படும் என கிரீஸின் தற்காலிகப் பிரதமர் ஐயோனிஸ் சர்மாஸ் உறுதியளித்துள்ளார்.
முன்னதாக புதன்கிழமை மதியம் 02:00 மணிக்குப் பிறகு கடலோரக் காவல்படையினரால் இணைக்கப்பட்டிருந்த கயிறு காரணமாக புலம்பெயர் மக்கள் பயணித்த படகு கவிழ்ந்ததாகக் கூறப்படும் தொடர் குற்றச்சாட்டுகளை கிரேக்க அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
@geetha
விபத்திற்கு அதுவும் ஒரு காரணம்
மேலும், விபத்தில் உயிர் பிழைத்த 104 பேரில் இருவர், கூட்ட நெரிசல் மிகுந்த படகு எப்படி நிலைகுலைந்தது என்பதை விவரித்துள்ளனர். ஆனால், கடலோர காவல்படையினரின் படகில் இருந்து புலம்பெயர் மக்களின் படகு கயிறால் இணைக்கப்பட்டிருந்ததாகவும், விபத்திற்கு அதுவும் ஒரு காரணம் என உள்ளூர் நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அதாவது புலம்பெயர் மக்களின் படகு கவிழ்வதற்கும் மூன்று மணி நேரம் முன்னர் கயிறால் கடலோர காவல்படையினர் இணைத்துள்ளனர்.
@reuters
இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தரப்பில் தெரிவித்த விளக்கம், புலம்பெயர் மக்களுக்கு உதவும் பொருட்டே கடலோர காவல்படையினர் கயிறால் அந்த படகை இணைத்ததாக குறிப்பிட்டுள்ளனர். விபத்துக்கு அது காரணமல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |