சுற்றுலா சென்ற இடத்தில்... ஒரே நாளில் இரு நண்பர்களை பறிகொடுத்த இளைஞர்கள்: திகில் பின்னணி
கிரேக்கத்தில் சுற்றுலா சென்ற இடத்தில் ஒரே பாடசாலையின் இரு மாணவர்கள் மர்மமாக மரணமடைந்த நிலையில், எஞ்சிய மாணவர்கள் அங்கிருந்து வெளியேற முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலையில் ஏற்பட்ட காயம்
கிரேக்கத்தின் Ios தீவில் இரவு ஊரு சுற்ற சென்றுவிட்டு குடியிருப்புக்கு திரும்பிய 18 வயது இளைஞர் Andrew O’Donnell சுருண்டு விழுந்து, தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக மரணமடைந்துள்ளார்.
@getty
சனிக்கிழமை விடிகாலை நேரம் இச்சம்பவம் நடந்துள்ளது. பொலிசார் தெரிவிக்கையில், தவறான பாதையை தெரிவு செய்ததால் தான் இளைஞர் Andrew O’Donnell மரணமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நடந்து சில மணி நேரங்களுக்கு பின்னர், ஆண்ட்ரூவின் வகுப்புத் தோழன் 18 வயதான Max Wall பயணிகள் படகு துறையில் காத்திருக்கும் நிலையில், திடீரென்று சுருண்டு விழுந்துள்ளார்.
@metro
ஒரே நாளில் இரு மரணங்கள்
உடனடியாக அவரை மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, மாக்ஸ் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் என்றும், ஆண்ட்ரூவைப் பற்றிய சோகமான செய்தியைக் கேட்டபோது அவர் மன உளைச்சலுக்கு ஆளானார் எனவும் கூறப்படுகிறது.
ஆண்ட்ரூவைப் பற்றிய தகவல் அறிந்த பின்னர் தாம் மாக்ஸ் சுருண்டு விழுந்ததாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. தெற்கு டப்ளின் பகுதியில் அமைந்துள்ள St Michael கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் இவர்கள்.
@metro
பட்டமளிப்பு விழாவை கொண்டாடும் பொருட்டே இவர்கள் கிரேக்கத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். தற்போது ஒரே நாளில் இரு மரணங்களை எதிர்கொண்டுள்ள மாணவர்கள், அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், உடனடியாக அங்கிருந்து வெளியேற அவசரப்படுவதாகவும் பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |