இவர்களெல்லாம் தப்பித்தவறி கூட க்ரீன் டீயை குடிக்கவே கூடாது? மீறினால் ஆபத்து
இன்று பெரும்பாலானோர் பால், டீ குடிப்பதை தவிர்த்து, கிரீன் டீ குடித்து வருகிறார்கள், இதற்கு காரணம் அதில் உள்ள மருத்துவ குணங்களே.
உலகிலேயே ஜப்பானியர்கள் தான் கிரீன் டீயை அதிகம் விரும்பி பருகுகிறார்கள்.
அதனால்தான் அவர்களால் இளமையுடனும், ஆரோக்கியமாக இருக்க முடிகிறது. நோய் நொடி இல்லாமல் வாழ்கிறார்கள். இதனால் தான் அவர்கள் நீண்ட நாட்கள் இளமையுடனும், ஆரோக்கியமாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.
இதற்கு கிரீன் டீயில் உள்ள உட்பொருட்களும், மருத்துவ குணங்களும் தான் காரணம். ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடித்தால் உடல் எடை கணிகமாக குறைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். க்ரீன் டீ ஆரோக்கியமானதுதான். ஆனால், அவற்றை சரியான முறையில் பருகாவிட்டால் உடலுக்கு கேடு விளைவித்துவிடும்.
எப்படி க்ரீன் டீயை பயன்படுத்துவது என்று பார்ப்போம் -
க்ரீன் டீ இலைகளை பயன்படுத்தும்போது 2 நிமிடத்திற்கு மேல் கொதிக்க வைக்கக்கூடாது.
க்ரீன் டீயில் சர்க்கரை மற்றும் நாட்டுச் சர்க்கரை கலந்து குடிக்கக்கூடாது.
அதேபோல், க்ரீன் டீயில் எலுமிச்சை சாறு மற்றும் சிறித தேன் கலந்து குடிக்கலாம்.
க்ரீன் டீயில் விட்டமின் பி, ஃபோலேட் சத்து, மக்னீசியம் உள்ளது.
க்ரீன் டீ இலையை பயன்படுத்தும்போது, தூள் செய்யாமல் இலைகளாக பயன்படுத்தினால் நல்லது.
க்ரீன் டீயை ஒரு நாளைக்கு 3 கப் மேல் குடிக்கக்கூடாது.
அல்சர் பிரச்சினை உள்ளவர்கள் க்ரீன் டீயை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |