இந்திய அணியின் தோல்விக்கு இதுதான் முக்கிய காரணம் - முன்னாள் பயிற்சியாளர் காட்டம்
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியாவின் தோல்விக்கான காரணத்தை கிரேக் சேப்பல் குறிப்பிட்டுள்ளார்.
கிரேக் சேப்பல்
லீட்ஸில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
ஃபீல்டிங் மற்றும் பந்துவீச்சு பலவீனமாக இருந்ததே தோல்விக்கு காரணம் என்ற கருத்து பரவலாக நிலவி வருகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
வித்தியாசமான அணுகுமுறை இல்லை
அவர் கூறுகையில், "இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியாவின் தோல்விக்கு ஃபீல்டிங் சிறிய காரணம்தான்.
பும்ராவைத் தவிர்த்து, இந்திய அணியின் பந்துவீச்சில் எந்தவொரு வித்தியாசமான அணுகுமுறையும் இல்லை.
எந்த வேறுபாடும் இல்லாமல், அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் ஒரே மாதிரியாக பந்துவீசுகிறார்கள்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |