உக்ரைன் அரசியல்வாதி செய்த பயங்கர செயல்... 26 பேர் படுகாயம்
உக்ரைனில், கவுன்சில் கூட்டம் ஒன்றின்போது, கிராம கவுன்சிலர் ஒருவர் கையெறிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் 26 பேர் படுகாயமடைந்தார்கள்.
நேற்று காலை நடந்த பயங்கரம்
உக்ரைனிலுள்ள Keretsky என்னுமிடத்தில் அந்த கிராம கவுன்சிலின் தலைமையகம் அமைந்துள்ளது. நேற்று காலை அந்த கட்டிடத்தில் கிராம கவுன்சில் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
Credit: Twitter/X
பட்ஜெட் குறித்த காரசாரமான விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்க, அப்போது அங்கு வந்த ஒருவர், நான் பேசட்டுமா என கேட்க, அவரை யாரும் சட்டை செய்யவில்லை.
உடனே தன் பாக்கெட்டிலிருந்து மூன்று கையெறிகுண்டுகளை எடுத்த அவர், சர்வசாதாரணமாக அவற்றை கீழே வீசியுள்ளார்.
அந்த குண்டுகள் வெடித்ததில் அந்த அறையிலிருந்த 26 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஆறுபேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
Credit: Twitter/@KyivPost
யார் அந்த நபர்?
கையெறிகுண்டுகளை வீசியவரின் பெயர் Serhiy Batrin (54) என தெரியவந்துள்ளது. அவர் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியால் நிறுவப்பட்ட Servant of the People party கட்சியைச் சேர்ந்த கவுன்சில் பிரதிநிதி ஆவார்.
Credit: Twitter/@KyivPost
எதனால் அவர் இந்த பயங்கர செயலைச் செய்தார் என்பது இதுவரை தெரியவராவிட்டாலும், தனது கிராமத்தில் கவுன்சிலால் மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகள் குறித்து அவர் அதிருப்தி கொண்டிருந்தார் என கூறப்படுகிறது.
இதற்கிடையில், குண்டுகளை வீசிய அவரும் படுகாயமடைந்ததாகவும், மருத்துவ உதவியாளர்கள் அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சையளித்ததாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |