இந்திய வம்சாவளிச் சிறுவனைக் கொன்ற கத்திகளை விற்றவர்களுக்கு 350,000 பவுண்டுகள் கொடுத்துள்ள பிரித்தானியா

United Kingdom Indian Origin England
By Balamanuvelan Sep 13, 2024 11:17 AM GMT
Report

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளிச் சிறுவன் ஒருவன் வாளால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை உருவாக்கியது நினைவிருக்கலாம்.

இந்நிலையில், அந்த சிறுவன் உட்பட பலரைக் கொலை செய்ய பயன்படுத்திய கத்திகளை விற்றவர்களுக்கு, பிரித்தானிய அரசு 350,000 பவுண்டுகள் கொடுத்துள்ள விடயம் பாதிக்கப்பட்டவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

தவறுதலாக கொல்லப்பட்ட சிறுவன்

இந்திய வம்சாவளிச் சிறுவனைக் கொன்ற கத்திகளை விற்றவர்களுக்கு 350,000 பவுண்டுகள் கொடுத்துள்ள பிரித்தானியா | Grieving Families Disgusted Killer Knife

கடந்த ஆண்டு, ஜூன் மாதம், 29ஆம் திகதி, ரோனன் கந்தா (Ronan Kanda, 16) என்ற பதின்ம வயது சிறுவன் இங்கிலாந்திலுள்ள Lanesfield என்ற இடத்தில் வைத்து வாளால் குத்தப்பட்டான்.

தகவலறிந்து வந்த மருத்துவ உதவிக் குழுவினரால் அவனைக் காப்பாற்ற முடியவில்லை. அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டான்.

இந்திய வம்சாவளிச் சிறுவனைக் கொன்ற கத்திகளை விற்றவர்களுக்கு 350,000 பவுண்டுகள் கொடுத்துள்ள பிரித்தானியா | Grieving Families Disgusted Killer Knife

விசாரணையில், சில இளைஞர்களிடம் ஒரு சிறுவன் கடன் வாங்கியிருந்ததாகவும், தவறுதலாக ரோனனை அந்த சிறுவன் என நினைத்து தாங்கள் தாக்கிவிட்டதாகவும் அந்த இளைஞர்கள் கூறியிருந்தார்கள்.

கத்திகளை விற்றவர்களுக்கு 350,000 பவுண்டுகள்

இந்நிலையில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில், ஆகத்து மாதம் 26ஆம் திகதி முதல், செப்டம்பர் மாதம் 23ஆம் திகதிவரை கத்திகளை ஒப்படைப்பவர்களுக்கு கத்தி ஒன்றிற்கு 10 பவுண்டுகள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அவ்வகையில், கத்திகளை ஒப்படைத்தவர்களுக்கு மொத்தம் 350,000 பவுண்டுகள் அரசால் வழங்கப்பட்டுள்ளன.

விடயம் என்னவென்றால், அந்தக் கத்திகளை காய்கறிகள் அல்லது மாமிசம் வெட்டுவது உட்பட வேறு எந்த உருப்படியான விடயத்துக்கும் பயன்படுத்தமுடியாது என கத்திகளை திரும்பப் பெற்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

அதாவது, அந்த கத்திகள் கொலை செய்வதற்கென்றே தயாரிக்கப்பட்டுள்ளன. ஆக, கத்தி விற்று 5 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகம் லாபம் பெற்ற ஒரு நிறுவனம், இப்போது அந்த கத்திகளை திருப்பிக் கொடுத்தும் ஒரு பெரும் தொகையை பெற்றுள்ளது.

கொந்தளிக்கும் பாதிக்கப்பட்டவர்கள்

இந்திய வம்சாவளிச் சிறுவனைக் கொன்ற கத்திகளை விற்றவர்களுக்கு 350,000 பவுண்டுகள் கொடுத்துள்ள பிரித்தானியா | Grieving Families Disgusted Killer Knife

இத்தகைய கத்திகளால் குறைந்தது ஏழு பேர் வரை கொல்லப்பட்டுள்ள நிலையில், அந்தக் கத்திகளை விற்றவர்களுக்கு அரசு பணம் கொடுத்துள்ள விடயம், பாதிக்கப்பட்டவர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.

கொல்லப்பட்ட இந்திய வம்சாவளிச் சிறுவனான ரோனன் கந்தாவின் அக்காவான நிகிதா (24) கூறும்போது, ஆயுதங்களைத் திருப்பிக் கொடுக்கும் திட்டம் நல்லதுதான்.

ஆனால், என் தம்பியைப் போன்றவர்களைக் கொன்றவர்களுக்கு கத்திகளைக் கொடுத்தவர்கள், கத்தி விற்றதால் ஏற்கனவே லாபம் பார்த்துள்ள நிலையில், அவர்களுக்கு மீண்டும் பணம் வழங்கியுள்ளது நியாயம் அல்ல என்று கூறியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US