இந்திய வம்சாவளிச் சிறுவனைக் கொன்ற கத்திகளை விற்றவர்களுக்கு 350,000 பவுண்டுகள் கொடுத்துள்ள பிரித்தானியா

United Kingdom Indian Origin England
By Balamanuvelan Sep 13, 2024 11:17 AM GMT
Report

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளிச் சிறுவன் ஒருவன் வாளால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை உருவாக்கியது நினைவிருக்கலாம்.

இந்நிலையில், அந்த சிறுவன் உட்பட பலரைக் கொலை செய்ய பயன்படுத்திய கத்திகளை விற்றவர்களுக்கு, பிரித்தானிய அரசு 350,000 பவுண்டுகள் கொடுத்துள்ள விடயம் பாதிக்கப்பட்டவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

தவறுதலாக கொல்லப்பட்ட சிறுவன்

இந்திய வம்சாவளிச் சிறுவனைக் கொன்ற கத்திகளை விற்றவர்களுக்கு 350,000 பவுண்டுகள் கொடுத்துள்ள பிரித்தானியா | Grieving Families Disgusted Killer Knife

கடந்த ஆண்டு, ஜூன் மாதம், 29ஆம் திகதி, ரோனன் கந்தா (Ronan Kanda, 16) என்ற பதின்ம வயது சிறுவன் இங்கிலாந்திலுள்ள Lanesfield என்ற இடத்தில் வைத்து வாளால் குத்தப்பட்டான்.

தகவலறிந்து வந்த மருத்துவ உதவிக் குழுவினரால் அவனைக் காப்பாற்ற முடியவில்லை. அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டான்.

இந்திய வம்சாவளிச் சிறுவனைக் கொன்ற கத்திகளை விற்றவர்களுக்கு 350,000 பவுண்டுகள் கொடுத்துள்ள பிரித்தானியா | Grieving Families Disgusted Killer Knife

விசாரணையில், சில இளைஞர்களிடம் ஒரு சிறுவன் கடன் வாங்கியிருந்ததாகவும், தவறுதலாக ரோனனை அந்த சிறுவன் என நினைத்து தாங்கள் தாக்கிவிட்டதாகவும் அந்த இளைஞர்கள் கூறியிருந்தார்கள்.

கத்திகளை விற்றவர்களுக்கு 350,000 பவுண்டுகள்

இந்நிலையில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில், ஆகத்து மாதம் 26ஆம் திகதி முதல், செப்டம்பர் மாதம் 23ஆம் திகதிவரை கத்திகளை ஒப்படைப்பவர்களுக்கு கத்தி ஒன்றிற்கு 10 பவுண்டுகள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அவ்வகையில், கத்திகளை ஒப்படைத்தவர்களுக்கு மொத்தம் 350,000 பவுண்டுகள் அரசால் வழங்கப்பட்டுள்ளன.

விடயம் என்னவென்றால், அந்தக் கத்திகளை காய்கறிகள் அல்லது மாமிசம் வெட்டுவது உட்பட வேறு எந்த உருப்படியான விடயத்துக்கும் பயன்படுத்தமுடியாது என கத்திகளை திரும்பப் பெற்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

அதாவது, அந்த கத்திகள் கொலை செய்வதற்கென்றே தயாரிக்கப்பட்டுள்ளன. ஆக, கத்தி விற்று 5 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகம் லாபம் பெற்ற ஒரு நிறுவனம், இப்போது அந்த கத்திகளை திருப்பிக் கொடுத்தும் ஒரு பெரும் தொகையை பெற்றுள்ளது.

கொந்தளிக்கும் பாதிக்கப்பட்டவர்கள்

இந்திய வம்சாவளிச் சிறுவனைக் கொன்ற கத்திகளை விற்றவர்களுக்கு 350,000 பவுண்டுகள் கொடுத்துள்ள பிரித்தானியா | Grieving Families Disgusted Killer Knife

இத்தகைய கத்திகளால் குறைந்தது ஏழு பேர் வரை கொல்லப்பட்டுள்ள நிலையில், அந்தக் கத்திகளை விற்றவர்களுக்கு அரசு பணம் கொடுத்துள்ள விடயம், பாதிக்கப்பட்டவர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.

கொல்லப்பட்ட இந்திய வம்சாவளிச் சிறுவனான ரோனன் கந்தாவின் அக்காவான நிகிதா (24) கூறும்போது, ஆயுதங்களைத் திருப்பிக் கொடுக்கும் திட்டம் நல்லதுதான்.

ஆனால், என் தம்பியைப் போன்றவர்களைக் கொன்றவர்களுக்கு கத்திகளைக் கொடுத்தவர்கள், கத்தி விற்றதால் ஏற்கனவே லாபம் பார்த்துள்ள நிலையில், அவர்களுக்கு மீண்டும் பணம் வழங்கியுள்ளது நியாயம் அல்ல என்று கூறியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

நீர்கொழும்பு, வவுனியா கூமாங்குளம், Brampton, Canada

18 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, பம்பலப்பிட்டி

20 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, வவுனியா, நல்லூர்

23 Jun, 2015
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Frankfurt Am Main, Germany, Paris, France, London, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

ஆத்தியடி, Scarborough, Canada

20 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Oud-Vossemeer, Netherlands

22 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ் தும்பளை மேற்கு, Jaffna, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Pontault-Combault, France

18 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Vaughan, Canada

19 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, பருத்தித்துறை, Mengede, Germany, Dortmund, Germany, Wuppertal, Germany

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, வவுனியா, சென்னை, India

03 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Markham, Canada

29 Jun, 2024
மரண அறிவித்தல்

Scarborough, Canada, Ajax, Canada, Markham, Canada

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US