ஐரோப்பிய நாடொன்றில் பயங்கரம்! பாடசாலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழப்பு
ஆஸ்திரியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் அரங்கேறிய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கிச்சூடு
ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் கிராஸ். இங்கு சுமார் 3 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.
இங்குள்ள உயர்நிலை பாடசாலை ஒன்றில் இன்று காலை துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் 8க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கிருந்த அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
விவரங்கள்
உள்நாட்டு ஊடகங்கள் கூறுகையில், இந்தச் சம்பவத்தில் தாக்குதலில் ஈடுபட்டவர் உட்பட 8க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
ஆனாலும், அதிகாரப்பூர்வமாக எத்தனைப் பேர் உயிரிழந்தனர் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டவர் யார் எனும் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |