கழிவுகளுடன் பலூன்களை அனுப்பி அட்டூழியம் செய்த வடகொரியா... எல்லையில் திடீரென்று துப்பாக்கிச் சூடு
நூற்றுக்கணக்கான பலூன்களின் கழிவுகளை அனுப்பி தென் கொரியாவை கதிகலங்கவைத்துள்ள வடகொரியா, தற்போது பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் கொரியா துப்பாக்கிச் சூடு
வடகொரிய வீரர்கள் எல்லையை கடந்த நிலையில், தென் கொரியா துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. சமீப நாட்களில் நூற்றுக்கணக்கான பலூன்களை கழிவுகள் மற்றும் குப்பைகளுடன் வடகொரியா அனுப்ப, பதிலுக்கு தென் கொரியா ஒலிபெருக்கிகளால் செய்திகள் மற்றும் பாடல்களை ஒலிபரப்பியது.
இந்த நிலையில் வடகொரியா எல்லையை நோக்கி தென் கொரியா துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. பொதுவாக Demilitarized Zone எனப்படும் பாதுகாப்பு மிகுந்த பகுதியில் இருதரப்பும் துப்பாக்கிச் சூடு நடத்துவதும் வன்முறை சம்பவங்கள் நடப்பதும் வாடிக்கையாகவே பார்ககப்படுகிறது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை எல்லையில் ஊடுருவல் சம்பவம் நடந்தது என்றும் தென் கொரிய துருப்புக்கள் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. வட கொரியா வேண்டுமென்றே எல்லை ஊடுருவலைச் செய்யவில்லை என நம்புவதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
அத்துமீறும் எவரையும் சுட்டுக்கொல்ல
மட்டுமின்றி, இச்சம்பவத்தில் வடகொரியா பதில் தாக்குதல் முன்னெடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது. ஞாயிறன்று சுமார் 12.30 மணியளவில் சில வட கொரிய வீரர்கள் எல்லையின் வடக்குப் பகுதியில் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் ஆயுததாரிகளாக இருந்தனர் என சிலரும், கட்டுமான வேலைக்கான பொருட்களுடன் காணப்பட்டானர் எனவும் கூறுகின்றனர். ஆனால் தென் கொரியா தரப்பில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதும், அவர்கள் உடனடியாக தங்கள் பகுதிக்கு விரைந்ததாக கூறப்படுகிறது.
Demilitarized Zone பகுதியில் அத்துமீறும் எவரையும் சுட்டுக்கொல்ல இரு தரப்புக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 155 மைல் நீளம், 2.5 மைல் அகலம் கொண்ட இந்த Demilitarized Zone பகுதியானது உலகின் பாதுகாப்பு மிகுந்த எல்லை என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |