இரு சிறுவர்கள் இலக்கு... பரிதாபமாக பலியான 10 பேர்: வெளியான பகீர் சம்பவம்
*இரண்டு குழந்தைகளையும் அவர்களின் தாயையும் கொன்ற துப்பாக்கிதாரி - சுட்டுக்கொன்ற பொலிஸ்
*பிரதமர் Dritan Abazovic அதிர்ச்சியை பதிவு செய்துள்ளதுடன், இறந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல்
ஐரோப்பிய பிராந்தியத்தில் அமைந்துள்ள மாண்டினீக்ரோ நாட்டில் இரு சிறார்களை இலக்கு வைத்த துப்பாக்கிதாரி ஒருவர் மொத்தமாக 10 அப்பாவி மக்களை சுட்டுக்கொன்ற சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.
@AP
குறித்த சம்பவத்தில் துரிதமாக செயல்பட்ட பொலிசார், துப்பாக்கிதாரியை வேறுவழியின்றி சுட்டுக்கொன்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். 34 வயதான அந்த நபர் வேட்டையாடும் துப்பாக்கியை பயன்படுத்தி முதலில் 8 மற்றும் 11 வயதுடைய இரண்டு குழந்தைகளையும் அவர்களின் தாயையும் கொன்றதாக பொலிசார் கூறுகின்றனர்.
குறித்த குடும்பமானது அந்த துப்பாக்கிதாரியின் குடியிருப்பில் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளனர். மூவரையும் கொன்றுவிட்டு, தெருவுக்கு வந்த அந்த நபர், கண்மூடித்தனமாக சுட்டதில் 13 பேர் துப்பாக்கி குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்துள்ளனர்.
@EPA
இதில் 7 பேர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டனர். பின்னர் வெளியான தகவலில் துப்பாக்கிதாரி உட்பட 11 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் அந்த துப்பாக்கிதாரியை உள்ளூர் நபர் ஒருவரே சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியானது. ஆனால், பாதுகாப்பு கருதி பொலிசாரே அவரை கொன்றதாக பின்னர் வெளிப்படுத்தியுள்ளனர்.
குறித்த கொலைவெறி தாக்குதலில் மேலும் 6 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். குறித்த படுகொலை சம்பவத்திற்கு பிரதமர் Dritan Abazovic அதிர்ச்சியை பதிவு செய்துள்ளதுடன், இறந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
@Getty
குறித்த சம்பவமானது அட்ரியாடிக் நாட்டில் பல தசாப்தங்களில் நடந்த மிக மோசமான துப்பாக்கிச் சூடு என தெரிவித்துள்ளனர்.