குரு பகவானால் ராஜயோகத்தை பெறப்போகும் 3 அதிர்ஷ்ட ராசிகள்
மகிழ்ச்சியை அள்ளி கொடுக்கும் கிரகமாக விளங்குபவர் குரு பகவான்.
இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார்.
குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். கடந்த டிசம்பர் 31ம் திகதி அன்று வக்கிர நிபர்த்தி அடைந்தார்.
குருபகவான் தற்போது நேரான பயணத்தில் இருக்கிறார். அவர் மே மாதம் ரிஷப ராசிக்குள் நுழைகிறார்.
குரு பகவானின் இந்த நேரடியான பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிஷ்ட யோகத்தை பெறவுள்ளன. அவை எந்தெந்த ராசி என்பதை பற்றி பார்க்கலாம்.
1. கடக ராசி
கடக ராசியினர்களுக்கு, தொடர்ந்து வந்த சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது.
மேலும், காதல் வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். குடும்பத்தில் இருந்து சிக்கல்கள் அனைத்தும். விலகும் சேமிப்பு அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
2. தனுசு ராசி
தனுசு ராசியினர்களுக்கு, குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொடர்ந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். கருத்து வேறுபாடுகள் குறையும்.
மேலும், உடல் ஆரோக்கியத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டாலும் பிரச்சனைகள் விலகும். பெற்றோர்களால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி உண்டாகும். மன நிம்மதி கிடைக்கும்.
3. கும்ப ராசி
கும்ப ராசியினர்களுக்கு, பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
மேலும், ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |