புனித தலமான மக்காவில் சுருண்டு விழுந்து மரணமடைந்த ஹஜ் பயணிகள்: பலர் மாயம்
இஸ்லாமியர்களின் புனித தலமான மக்காவில் ஹஜ் யாத்திரை மேற்கொண்ட பயணிகள் பலர் வெப்ப அலை காரணமாக சுருண்டு விழுந்து மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
51.8 டிகிரி செல்சியஸ் வெப்பம்
காணாமல் போனதாக கூறப்படும் ஹஜ் யாத்ரீகர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனைகளைத் தேடிச் சென்று விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இறப்பு எண்ணிக்கை 650 கடந்துள்ளதாகவும், 2.700 பயணிகள் வெப்பம் தொடர்பான பாதிப்புகளால் சிகிச்சை நாடியுள்ளதாகவும் உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
திங்களன்று மக்கா பகுதியில் 51.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. வெளியான தரவுகளின் அடிப்படையில் குறைந்தது 323 எகிப்தியர்கள் இறந்துள்ளனர். 35 துனிசிய குடிமக்கள் இறந்துள்ளனர்.
இறந்தவர்களில் பலர் கடுமையான வெப்பத்தால் இறந்தார்கள் என்றே குடும்ப உறுப்பினர்கள் சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளனர். மட்டுமின்றி, மற்ற குடும்பங்கள் காணாமல் போன உறவினர்களை சவுதி அரேபிய மருத்துவமனைகளில் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இதனிடையே, செவ்வாயன்று ஜோர்தானிய யாத்ரீகர்களுக்கு 41 அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஜோர்தானிய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் இறப்பு எண்ணிக்கை 6ல் இருந்து 41 என அதிகரித்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
1.8 மில்லியன் மக்கள் ஹஜ் பயணம்
ஈரான நாட்டவர்களில் 11 பேர்கள் மரணமடைந்துள்ளதாகவும் 24 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசிய மக்கள் 144 பேர்கள் வெப்ப அலை காரணமாக மெக்கா பயணத்தின் போது மரணமடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு உலகெங்கிலும் இருந்து 1.8 மில்லியன் மக்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் சவுதி அரேபியாவில் இருந்து வெளியான ஆய்வறிக்கை ஒன்றில்,
ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் மக்கா பகுதியில் வெப்பநிலை 0.4C அதிகரிப்பதாக உறுதி செய்துள்ளனர். பல யாத்ரீகர்கள், குறிப்பாக வயதானவர்கள், வெப்பத்தின் காரணமாக சுருண்டு விழுந்துள்ளதாகவும், மருத்துவ உதவி நாடியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |