ஹமாஸும், புடினும் ஜனநாயக நாடுகளை அழிப்பவை: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்
ஹமாஸும், ரஷ்ய ஜனாதிபதி புடினும் அருகில் உள்ள ஜனநாயக நாடுகளை அழித்தொழிப்பதே வேலையாக வைத்துள்ளனர் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஜோ பைடன் குற்றச்சாட்டு
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தாக்குதல் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது ஆதரவை வெளிபடுத்தி வந்தார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமையான இன்று வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவத்தில் நாட்டு மக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உரையாற்றினார்.
அந்த உரையில் ஹமாஸ் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் இரண்டும் தீவிரவாதம் மற்றும் கொடுங்கோன்மையின் அச்சுறுத்தல் கொண்டவை.
இரண்டுமே அண்டை நாடுகளின் ஜனநாயகத்தை அழித்தொழிப்பதையே இலக்காக வைத்துள்ளனர்.
இதனால் ஏற்படும் மோதல்கள் மற்றும் குழப்பங்கள் உலகின் பிற பகுதிகளுக்கு பரவி அதன் பாதிப்புகள் அதிகரிக்க வைக்கும் என தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கும், இஸ்ரேலுக்கும் அமெரிக்கா அதிகமான நிதியுதவி வழங்க வேண்டும், இந்த நிதியுதவி அமெரிக்காவின் எதிர்கால நலனுக்கான முதலீடு.
இதனால் அமெரிக்காவின் எதிர்காலம் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது.
பல ஆண்டுகளுக்கு வருங்கால அமெரிக்க சந்ததிகள் இதன் மூலம் பலன் பெறுவார்கள், நமது நட்புறவுகளே நமக்கான பாதுகாப்பு என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |