ஹமாஸ் அரக்கர்களால்... படுகொலை செய்யப்பட்ட சிறார்களின் புகைப்படங்களை வெளியிட்ட இஸ்ரேல்
இஸ்ரேலிய சிறார்கள் 40 பேர்களை ஹமாஸ் படைகள் கொடூரமாக படுகொலை செய்ததாக எழுந்த பகீர் குற்றச்சாட்டுகளுக்கு தற்போது ஆதாரங்களை வெளியிட்டுள்ளது இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம்.
சிறார்களின் புகைப்படங்கள்
சமூக ஊடகங்களில் தொடர்புடைய புகைப்படங்களை வெளியிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம், அமெரிக்க வெளிவிவகார செயலர் Antony Blinken உடன் பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிரதமர் அலுவலகம் பகிர்ந்துள்ள சிறார்களின் புகைப்படங்கள் அனைத்தும் ஹமாஸ் அரக்கர்களால் படுகொலை செய்யப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டவர்கள் எனவும் கூறப்படுகிறது.
ஆனால் இஸ்ரேலின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஹமாஸ் படைகள் மறுப்பு தெரிவித்துள்ளது. ஹமாஸ் கொன்றுள்ளதாக கூறி இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள புகைப்படங்களை சுட்டிக்காட்டி, ஹமாஸ் மனிதத்தன்மையற்ற அமைப்பு எனவும் ஹமாஸ் என்பது ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் மறு உருவாக்கம் எனவும் பெஞ்சமின் நெதன்யாகு கொந்தளித்துள்ளார்.
தீமையின் உச்சம்
40 சிறார்களை ஈவு இரக்கமின்றி ஹமாஸ் படுகொலை செய்துள்ளதாக இஸ்ரேல் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.
சனிக்கிழமை ஹமாஸ் தொடுத்த தாக்குதலானது மிகக் கொடூரமானது, தீமையின் உச்சம் எனவும் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இஸ்ரேல் குறிப்பிட்டுள்ள சிறார்களின் புகைப்படங்களை அமெரிக்க அதிகாரிகள் தரப்பு பார்வையிடவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இஸ்ரேல் குறிப்பிட்டுள்ள தரவுகளின் அடிப்படையிலேயே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |