பாராகிளைடர் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் குழுவினரின் தளபதி: கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு
இம்மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 7ஆம் திகதி, காசாவிலிருந்து இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர், 1,400 இஸ்ரேலியர்களைக் கொன்று குவித்தனர்.
பாராகிளைடர் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்த ஆயுதக்குழுவினர்
அப்போது, சிலர் பாராகிளைடர்கள் மூலம் எல்லையைத் தாண்டி இஸ்ரேலுக்குள் வந்திறங்கும் காட்சிகள் வெளியாகியிருந்தன.
தற்போது, அந்த பாராகிளைடர்கள் மூலம் வந்திறங்கிய ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் தளபதியைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.
@MarioNawfal
கொல்லப்பட்ட Asem Abu Rakaba என்னும் அந்த நபர், இஸ்ரேல் ராணுவ முகாம்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கும் காரணமானவர் ஆவார்.
அக்டோபர் 7 தாக்குதலுக்கு திட்டமிட்டவர்களில் Asem Abu Rakabaவும் ஒருவர் என்று கூறியுள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படை, பாராகிளைடர்கள் மூலம் எல்லையைத் தாண்டி இஸ்ரேலுக்குள் வந்திறங்கிய ஹமாஸ் குழுவினரை வழிநடத்தியவரும் அவர்தான் என்றும், ட்ரோன் தாக்குதல்களுக்கும் அவர்தான் பொறுப்பு என்றும் எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |