இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்: ஹமாஸ் படைக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பு
இஸ்ரேலிய எல்லை கிராமங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஹாமஸ் அமைப்பினரின் படை தளபதி கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தாக்குதல் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், காசாவில் வசிக்கும் மக்கள் உடனடியாக வடக்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதிக்கு உடனடியாக இடம்பெயருமாறு இஸ்ரேல் எச்சரித்தது.
இதன் மூலம் இஸ்ரேலிய ராணுவ படை பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் தரைவழி தாக்குதல் நடத்த இருப்பதாக கூறப்பட்டு வந்தது, மேலும் இஸ்ரேலிய எல்லையில் தங்கள் நாட்டின் ராணுவ படையில் இஸ்ரேல் குவித்தது.
AFP
கொல்லப்பட்ட ஹமாஸ் படை தளபதி
இந்நிலையில் இஸ்ரேலின் எல்லையில் உள்ள நிரிம் மற்றும் நிர் ஓஸ் என்ற இரண்டு கிராமங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் படை தளபதி கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு ஏஜென்சியின் உளவுத்துறை வழங்கிய தகவலில், ஞாயிற்றுக்கிழமை நிரிம் மற்றும் நிர் ஓஸ் என்ற இரண்டு கிராமங்கள் மீது இஸ்ரேலிய ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் நுக்பா பிரிவின் தெற்கு கான் யூனிஸ் பட்டாலியனின் தளபதி பிலால் அல்-கெத்ரா கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேலிய விமானப்படை தெரிவித்துள்ளது.
மேலும் IDF மற்றும் ISA நடத்திய தாக்குதலில் தெற்கு கான் யூனிஸில் உள்ள படைகளின் நுக்பா தளபதி கொல்லப்பட்டுள்ளார், இவர் கிப்புட்ஸ் நிரிம் மரணத்திற்கு காரணமானவர் என்றும் இஸ்ரேல் விமானப்படை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |