ஆன்டி பர்னாம் தலைமையின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவு எப்படி இருக்கும்?
ஆன்டி பர்னாம் தலைமையின் கீழான அரசும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நல்லுறவுகளையே நாட உள்ளதாக துறைசார் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் பிரதமராக இருந்த சர் கெய்ர் ஸ்டார்மர், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கம் காட்டிவந்தது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், ஜூலை மாதம் 22ஆம் திகதி, பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு ஒன்று நடைபெற இருந்தது.

ஆனால், ஸ்டார்மர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததால், அந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.
ஆக, பிரித்தானியாவின் புதிய பிரதமராக ஆன்டி பர்னாம் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது தலைமையின் கீழ் பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய உறவுகளின் நிலைப்பாடு என்ன என்னும் கேள்வி எழுந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவு
ஆன்டி பர்னாம், தனது அரசின் பிரெக்சிட்டுக்கு பிந்தைய பேச்சுவார்த்தைகளுக்கான அமைச்சராக ஹாமிஷ் ஃபால்கோனர் (Hamish Falconer) என்பவரை நியமித்துள்ளார்.

இந்நிலையில், ஆன்டி பர்னாம் தலைமையின் கீழான அரசும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நல்லுறவுகளையே நாட உள்ளதாக, ஃபால்கோனர் தெரிவித்துள்ளார்.
தான் தன் மனைவியுடன் தேனிலவுக்காக சென்றிருந்த நிலையில், ஆன்டி பர்னாம் தன்னை அழைத்து தனக்கு இந்த பொறுப்பைக் கொடுத்ததாக தெரிவித்துள்ள ஃபால்கோனர், முன்பு தான் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியவன் என்றும், ஆகவே ஐரோப்பிய ஒன்றியத்தைப் பொருத்தவரை ஒத்த கருத்துக்கள் கொண்ட நம் நண்பர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவே தான் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |