அனுமன் ஜெயந்தி 2024: இன்று அனுமனை எப்படி வழிபட்டால் துன்பங்கள் விலகும்?
வானர குலத்தை சேர்ந்த அஞ்சனைக்கும், கேசரிக்கும் மகனாக அவதரித்தவர் அனுமன். இவர் மார்கழி மாதம் அமாவாசை திதியில் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன.
அனுமனை, ராம பக்தன், வாயு புத்திரன், சிரஞ்ஜீவி, மாருதி, ஆஞ்சநேயர் என பலவிதமான பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் மார்கழி மாதம் அமாவாசை தினமான இன்று(ஜன.11) இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகின்றன.
அனுமன் ஜெயந்தியான இத்திருநாளில்(ஜன.11) அனுமனை வழிபடும் முறையை பற்றியும், அதனால் கிடைக்கும் வழிபாட்டு பலன்களை பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.
வழிபடும் முறை
அனுமன் ஜெயந்தி அன்று ராமர் கோவில், பெருமாள் கோவில் அல்லது அனுமன் கோவிலுக்கு சென்று அனுமனுக்கு துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும்.
முடிந்தவர்கள் வடைமாலை சாற்றியும் அனுமனை வழிபடலாம் மற்றும் ஸ்ரீராம ஜெயம் எழுதியும் மாலை கட்டி போடலாம்.
கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் உள்ள அனுமன் படத்தை மஞ்சள் நிற பூக்களால் அலங்கரித்து, துளசி சாற்றி வழிபடலாம்.
இத்திருநாளில் அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவதால் நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
நைவேத்தியமாக அவல், பொரி, கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர், வாழைப்பழம் ஆகியவற்றை அனுமனுக்கு படைத்து வழிபடலாம்.
அனுமன் ஜெயந்தி அன்று ஸ்ரீராம ஜெயம் எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை உச்சரிக்கலாம். ஸ்ரீராம ஜெயம் எழுதுவதும், சுந்தர காண்டம் படிப்பதும் மிக நல்ல பலனை கொடுக்கும்.
அனுமனுக்குரிய மந்திரங்கள், அனுமன் சாலிசா படிப்பது மிகவும் சிறப்பானது.
வழிபாட்டு பலன்கள்
அனுமன் ஜெயந்தி அன்று இதுபோல் அனுமனை வழிபட்டால் துன்பங்கள் அனைத்தும் நீங்கும். நன்மைகள் பெருகும்.
திருமண தடை உள்ளிட்ட அனைத்து தடைகளும் நீங்கி, எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
மேலும், ஆரோக்கியம் பெருகும். மன பயங்கள் நீங்கி, தைரியம் பிறக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |