கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் இந்திய நட்சத்திர வீரர்! அடுத்த கட்ட திட்டம் குறித்து கசிந்த தகவல்
இந்திய நட்சத்திர வீரர் ஹர்பஜான் சிங் அடுத்த வாரம் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஹர்பஜான் சிங். 2015 முதல் இந்திய அணியில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
2016 ஆசியா கோப்பை தொடரில் நடந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியே ஹர்பஜான் இந்திய அணிக்காக விளையாடிய கடைசி டி20 போட்டியாகும்.
எனினும், ஹர்பஜான் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தார். கடைசியாக 2021 ஏப்ரல் மாதம் சென்னையில் நடந்த பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணிக்காக அவர் களமிறங்கினார்.
இந்நிலையில், அடுத்த வாரம் தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பொறுவதை ஹர்பஜான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என ஐபிஎல் வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் ஹர்பஜான் அடுத்த ஐபிஎல் சீசனில் பிரபல ஐபிஎல் அணியின் பயிற்சி ஊழியராக சேர உள்ளார்.
ஹர்பஜான் ஆலோசகர், அறிவுரையாளர் அல்லது ஆலோசனை குழு உறுபினராக செயல்பட உள்ளார், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் ஐபிஎல் அணி, ஹர்பஜானின் அனுபவத்தை பயன்படுத்த ஆர்வாமாக உள்ளது.
அதேசமயம், ஏலத்தில் யாரை வாங்க வேண்டும் என்பது தொடர்பிலும் அவர் அணிக்கு உதவி உள்ளார் என ஐபிஎல் வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.