பவுலிங்கே போட மாட்டேங்குறாரே... இவர் ஆல் ரவுண்டரா? இந்திய வீரரை கடுமையாக விமர்சிக்கும் ரசிகர்கள்
இந்திய அணியில் தொடர்ந்து பந்துவீசாமல் இருக்கும் ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக ரசிகர்கள் பலரும் போர்கொடி தூக்கியுள்ளனர்.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான நேற்றைய பயிற்சி போட்டியில் அவுஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியது.
இந்தநிலையில், கடந்த போட்டிகளை போலவே இந்த போட்டியிலும் பந்துவீசாத ஹர்திக் பாண்டியா கிரிக்கெட் ரசிகர்களின் விமர்ச்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
பந்துவீச முடியாத ஒருவரை எந்த அடிப்படையில் ஆல் ரவுண்டராக இந்திய அணி ஏற்று கொண்டு அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருகிறது என கேள்வி எழுப்பும் ரசிகர்கள், ஹர்திக் பாண்டியாவால் பந்துவீச முடியாவிட்டால் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும் பேட்டிங்கிலும் அவர் பெரிதாக சோபிக்கைவில்லையே என குறை கூறி வருகின்றனர்.