இளவரசர் ஹாரி நீதிமன்றத்தில் வழக்கு! தெரிய வந்த காரணம்
இளவரசர் ஹாரி தன்னுடைய பாதுகாப்பு விவகராம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியா இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியரின் இளையமகன் ஆவார் ஹாரி. கடந்த 2020-ஆம் ஆண்டு அரண்மனை பதவி மற்றும் அதிகாரம் போன்ற அனைத்தில் இருந்தும் ஹாரி விலகிவிட்டார்.
இதன் காரணமாக அவருக்கு மக்களின் வரிப்பணத்தில் பாதுகாப்பு அளிப்பது நிறுத்தப்பட்டது. தற்போது ஹாரி அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் மனைவி மேகன், மகன் ஆர்ச்சி, மகள் லிலிபெட்டுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் பிரித்தானியாவிற்கு அடிக்கடி குடும்பத்துடன் சென்று வர விரும்புகிறார். இதற்காக தனது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய எண்ணுகிறார்.
தனது தனிப்பட்ட பாதுகாவலர்களுக்கு வெளிநாட்டில் பாதுகாப்பு வரம்பு இல்லை என்று கருதுகிறார். தனது பாதுகாப்புக்கு தனிப்பட்ட முறையில் பணம் செலுத்துவதற்கு இளவரசர் ஹாரி விரும்புகிறார்.
ஆனால் அதற்கு அந்த நாட்டின் உள்துறை அலுவலகம் அனுமதி அளிக்க மறுத்து விட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து அங்குள்ள உயர்நீதிமன்றத்தில் ஹாரி வழக்கு தொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.