ஆர்ச்சி, லிலிபெட்டுக்கு கிடைத்த 'பிறப்புரிமை', அரச பட்டம் குறித்து ஹரி-மேகன் அறிக்கை!
தங்கள் பிள்ளைகளுக்கு கிடைத்துள்ள அரச பட்டங்கள் அவர்களுக்கு நியமாக கிடைக்கவேண்டிய 'பிறப்புரிமை' என்று இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் தெரிவித்துள்ளனர்.
அரச பட்டம்
இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் தம்பதியின் பிள்ளைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட் இருவரும் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லசால் அதிகாரப்பூர்வமாக 'இளவரசர்' மற்றும் 'இளவரசி'யாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
அரச குடும்பத்தின் இணையதளத்தில் ஆர்ச்சி மற்றும் லிலிபெட்டின் பெயர்கள் அரச பட்டங்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அரச குடும்பத்தில் அரியணை வரிசையில் அவர்கள் 6-வது மற்றும் 7-வது இடத்தில் உள்ளனர்.
Netflix/Archewell
பிறப்புரிமை
இந்நிலையில், ஆர்ச்சி மாறும் லிலிபெட்டுக்கு அரச பட்டம் அளிக்கப்பட்டிருப்பது, அவர்களது தாத்தா மன்னரானதால் அவர்களுக்கு நியமாக கிடைக்கவேண்டிய 'பிறப்புரிமை' என இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்குப் பிறகு, இளவரசர் ஹரியின் குழந்தைகளை இளவரசர் மற்றும் இளவரசி என்று அழைக்க அனுமதிக்கப்படும் என்று தனது மகனுடனான தனிப்பட்ட உரையாடலில் மன்னர் சார்லஸ் கூறியதாகக் கூறப்படுகிறது.
இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள், செப்டம்பர் மாதம் சார்லஸ் அரியணைக்கு வந்தபோது அவர்களின் அரச பட்டங்கள் விரைவாக மாற்றப்பட்டன.
Image: alexilubomirski/Instagram
ஆனால் ஆர்ச்சி மற்றும் லிலிபெட்டுக்கு இன்னும் அரச பட்டம் வழங்கப்படாமல் இருந் நிலையில், ஹரி மற்றும் மேகன் இறுதி முடிவு எடுப்பதற்காக காத்திருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், ஹரி மற்றும் மேகன் அது அவர்களது பிறப்புரிமை என கூறி, அதனை அங்கீகரித்து உறுதி செய்துள்ளனர்.