குடும்பமாக பிரித்தானியாவில் குடியேறிய இளவரசர் ஹரி-மேகன்
Harry Meghan return for UK stay: பிரித்தானியாவில் நீண்டகாலம் தங்கும் திட்டத்துடன் ஹரி-மேகன் தம்பதி குழந்தைகளுடன் வந்து இறங்கியுள்ளனர்.
குடும்பத்துடன்...
இளவரசர் ஹரி மற்றும் மேகன், தங்கள் குழந்தைகள் ஆர்ச்சியும் லிலிபெட் ஆகியோருடன், கலிஃபோர்னியாவிலிருந்து தனியார் விமானத்தில் புறப்பட்டு, பிரித்தானியாவின் பர்மிங்காம் விமான நிலையத்தில் இறங்கினர்.
அவர்கள் பிரித்தானியாவில் நீண்ட காலம் தங்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

2020-ஆம் ஆண்டு அரச குடும்ப பொறுப்புகளை விட்டு விலகிய பிறகு, அவர்கள் அமெரிக்காவில் குடியேறியிருந்தனர். இப்போது, அவர்கள் மீண்டும் பிரித்தானியாவில் குடியேற முடிவு செய்துள்ளனர்.
ஆனால், அவர்கள் “non-working royals” எனப்படும் நிலையில், அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ பணிகளில் ஈடுபடமாட்டார்கள்.
அவர்கள் லண்டன் நகரத்திற்கு வெளியே, கோட்ஸ்வோல்ட்ஸ் பகுதியில் உள்ள தனியார் வீட்டில் தங்க உள்ளனர். குழந்தைகள் ஆர்ச்சியும் லிலிபெட்டும் அங்குள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர், புதிய கல்வியாண்டு அடுத்த வாரம் தொடங்க உள்ளது.
பாதுகாப்பு
அவர்களின் பாதுகாப்பு குறித்து விவாதம் எழுந்துள்ளது. ஹரி, முன்னதாக தனது பாதுகாப்பு குறைக்கப்பட்டதை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தியிருந்தார். தற்போது, அவர்களுக்கு எந்த அளவிலான பாதுகாப்பு வழங்கப்படும், அதை யார் ஏற்க வேண்டும் என்பது தெளிவாகவில்லை.
இந்த வருகை, அரச குடும்பத்துடன் உள்ள உறவுகளை மீண்டும் சீரமைக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. 2022-ஆம் ஆண்டு ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்ற பிறகு, ஹரி மற்றும் மேகன் இருவரும் ஒன்றாக பிரித்தானியாவிற்கு வருவது இதுவே முதல் முறை.
அவர்களின் நீண்ட காலம் தங்குவது குறித்து பொதுமக்கள் மற்றும் ஊடகங்களில் பல்வேறு எதிர்வினைகள் எழுந்துள்ளன. பலரும், அவர்களின் பாதுகாப்பு செலவுகளை அரசாங்கம் ஏற்க வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |