தரையில் உட்கார்ந்து குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டிருந்த மேகனைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்: இளவரசர் ஹரி
தங்கள் திருமணம் நடப்பதற்கு சில நாட்கள் முன்பு, மேகனுக்கும், தன் அண்ணியான இளவரசி கேட்டுக்கும் நடந்த ஒரு உரையாடல் மேகனைக் குலுங்கிக் குலுங்கி அழவைத்ததாக தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார் இளவரசர் ஹரி.
என்ன பிரச்சினை?
இளவரசர் ஹரி, மேகன் திருமணண் நடப்பதற்கு முன்பே, மேகனுக்கும் இளவரசர் வில்லியமுடைய மனைவியும் தனது அண்ணியுமான கேட் மிடில்டனுக்கும் நடுவில் பிரச்சினை ஒன்று நடந்ததாக தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார் இளவரசர் ஹரி.
அதாவது, திருமணத்தின்போது சிறுபிள்ளைகள் மணமகளுக்கு அருகில் பூக்கூடைகளை சுமந்து செல்வார்கள். அப்படி பூக்கூடை சுமந்து செல்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இளவரசர் வில்லியம் கேட் தம்பதியரின் மகளான குட்டி இளவரசி சார்லட்டும் ஒருவர்.
@Getty
ஆனால், குட்டிப்பெண்களுக்காக தைக்கப்பட்ட உடைகள் தொளதொளவென இருப்பதாகவும், தனது உடையைக் கண்டு சார்லட் அழுததாகவும் கேட், மேகனுக்கு குறுஞ்செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தரையில் உட்கார்ந்து குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டிருந்த மேகன்
கேட் மிடில்டனின் குறுஞ்செய்திக்கு மேகன் ஒரு பதில் அனுப்ப, கேட் மீண்டும் ஒரு செய்தி அனுப்ப, பெண்களுக்கிடையே உரசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மேகனைக் காண ஹரி வந்தபோது, மேகன் தரையில் உட்கார்ந்து குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டிருந்தாராம். அதைக் கண்டு தான் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார் ஹரி.
கேட் ஒரு இளவரசி, ஹரியின் அண்ணியும்கூட, மேகன் இன்னமும் ராஜ குடும்பத்துக்குள் காலடி கூட எடுத்துவைக்கவில்லை. அப்படியிருந்தும் கேட் அனுப்பிய செய்தி அவரை குலுங்கிக் குலுங்கி அழவைத்ததாம்.
ஹரியும், தன் அண்ணிதான் வாக்குவாதத்துக்குக் காரணம் என்று கூறியுள்ளார்.
அப்படியிருந்தும் மறுநாள் கேட் பூங்கொத்து ஒன்றை வாங்கிக்கொண்டு வந்து மேகனிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். அதையும் ஹரி தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.