இளவரசர் ஹரியின் புத்தகம் மன்னராட்சிக்கு அடிக்கப்பட்ட சாவுமணி? நிபுணர் கடும் எச்சரிக்கை
இளவரசர் ஹரியின் புத்தகம், மன்னராட்சி முடிவுக்கு வருவதன் துவக்கத்துக்கு அடையாளமாக இருக்கலாம் என எச்சரித்துள்ளார் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர்.
ராஜ குடும்பத்தை கலங்கவைத்துள்ள இளவரசர் ஹரியின் புத்தகம்
பிரித்தானிய இளவரசர் ஹரி எழுதியுள்ள Spare என்னும் புத்தகம் ராஜ குடும்பத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
அதில் அவர் தன் குடும்பத்தினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதால் அவர் மீது விமரசனங்கள் எழுந்துள்ளன.
ஆனால், ஹரியின் புத்தகம் ராஜ குடும்பத்தின் நடத்தை குறித்து கூறியுள்ள கருத்துக்கள் அலட்சியப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ள மன்னர் சார்லசின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவரான ராஜ குடும்ப நிபுணர் Catherine Mayer, ஹரியின் புத்தகம் மன்னராட்சியின் முடிவின் ஆரம்பத்துக்கான அடையாளமாக இருக்கலாம் என எச்சரித்துள்ளார்.
மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டிய மன்னர் குடும்பத்தின் மீதே குற்றச்சாட்டுகள்
மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டிய மன்னர் குடும்பத்திலேயே இனவெறுப்புக் குற்றச்சாட்டுகள், வம்புக்கிழுத்தல், பெண்கள் மோசமாக நடத்தப்படுதல் ஆகிய விடயங்கள் இருப்பதாக ஹரியின் புத்தகம் கூறும் நிலையில், அவற்றை அப்படியே விட்டுவிடக்கூடாது என்கிறார் Catherine Mayer.
இந்த குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படாமல் விட்டுவிடப்படுமானால், பரம்பரை பரம்பரையாக வரும் மன்னராட்சியின் மீதான நம்பிக்கையையே அது அழித்துவிடக்கூடும் என்கிறார் அவர்.
அதாவது, இளவரசர் ஹரி தன் புத்தகத்தில் தன் குடும்பத்தின் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ராஜ குடும்பத்திலேயே இனவெறுப்பு முதலான பிரச்சினைகள் இருப்பது மன்னராட்சிக்குக் கேடு. ஆகவே, ஹரியின் குற்றச்சாட்டுகளுக்கு மன்னர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால், மக்கள் மன்னராட்சி மீதான நம்பிக்கையை இழந்துவிடுவார்கள் என்பதே Catherine Mayerஇன் வாதம்.