மனைவியுடன் கருத்துவேறுபாடு! விரக்தியில் இருந்ததற்கான காரணம் என்ன? ஈழத்தமிழரான சின்னத்திரை நடிகர் தற்கொலை குறித்து முக்கிய தகவல்
இலங்கை தமிழரான சின்னத்திரை நடிகர் இந்திரகுமார் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அது தொடர்பிலான முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளது.
தமிழ் சின்னத்திரை நடிகரான இந்திரகுமார் பெரம்பலூரில் நேற்று முன் தினம் இரவு நண்பர்களுடன் திரையரங்கில் படம் பார்த்துவிட்டு, மதனகோபாலபுரத்தில் தனது நண்பரின் வீட்டில் அவர் தனியாக தூங்கியுள்ளார்.
அங்கு மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு இந்திரகுமார் தற்கொலை செய்துகொண்டார்.
அவரின் சடலத்தை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மரணித்த இந்திரகுமாருக்கு மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.
இதனிடையில் இந்திரகுமார் வாழ்வில் சில பிரச்சினைகள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி நடிப்பதற்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்காமல் தனது தொழிலில் போராட்டத்தை சந்தித்து வந்திருக்கிறார் இந்திரகுமார்.
அதே போல திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைக்காததால் விரக்தியில் இருந்திருக்கிறார் என கூறப்படுகிறது.
இதோடு மனைவியுடன் கருத்து வேறுபாடு இந்திரகுமாருக்கு இருந்திருக்கிறது என தெரியவந்துள்ளது.
தொடர்ந்து அவர் மரணம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
