அவுட்டாக்கிய இந்திய வீரரை பாராட்டி சென்ற இலங்கை பேட்ஸ்மேன்! கமெராவில் பதிவான வீடியோ காட்சி
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் தன்னை அவுட்டாக்கிய இந்திய வீரரை, இலங்கை அணி வீரர் ஹசரங்கா அவரை பாராட்டி சென்ற வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் நடந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
அதில், ஆட்டத்தின் 15-வது ஓவரில் போது தனது கடைசி ஓவரை வீசிய ராகுல் சாகர் கடைசி பந்தில் முக்கிய வீரரான ஹசரங்காவை ஆட்டமிழக்க வைத்து வெளியேற்றினார்.
Wanindu Hasaranga upholds the Spirit of the Game! ??
— Sony Sports (@SonySportsIndia) July 28, 2021
Tune into Sony Six (ENG), Sony Ten 1 (ENG), Sony Ten 3 (HIN), Sony Ten 4 (TAM, TEL) & SonyLIV (https://t.co/QYC4z57UgI) now! ?#SLvINDOnlyOnSonyTen #HungerToWin #WaninduHasaranga pic.twitter.com/0CwCaTkkAS
அந்த ஓவரின் முடிவில் இலங்கை அணி 94 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. மேலும் இலங்கை அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 39 ஓட்டங்கள் குவிக்க வேண்டும் என்ற நிலைமை இருந்தது.
அந்த நேரத்தில், தனது நான்காவது ஓவரின் கடைசி பந்தில் முக்கியமான விக்கெட்டை வீழ்த்திய ராகுல் சாகர் அந்த விக்கெட் பெரிய விக்கெட் என்பதனால் சற்று ஆக்ரோஷமாக அந்த விக்கெட்டை கொண்டாடினார்.
ஆனால், அவுட்டான ஹசரங்கா அவர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டாலும் கோபப்படாமல் ராகுல் சாகர் வீசிய பந்து மிகச் சிறப்பாக இருந்தது என்று கூறி தனது பேட்டின் மீது கையால் தட்டி கை தட்டுவது போல செய்கை செய்துவிட்டு சென்றார்.
இது இந்திய ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.