தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு துவங்கும் வாக்குப் பதிவு: வாக்களிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை?
தமிழகத்தில் இன்று காலை வாக்குப் பதிவு துவங்கவுள்ள நிலையில், இதற்கு என்னென்ன ஆவணங்கல் என்பது குறித்து பார்ப்போம்.
இன்று தமிழகத்தின் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி, இரவு 7 மணிக்கு முடிவடைகிறது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மக்களுக்கு வாக்களிக்க ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
வாக்களிக்க போகும் குறிப்பாக மக்கள், வாக்காளர் அடையாளர் அட்டை எடுத்துச் செல்ல வேண்டும்.
அதோடு Voter Slip கொண்டு செல்வது அவசியம். ஒருவேளை வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றால் என்னென்ன ஆவணங்களைக் கொண்டு செல்லலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- ஓட்டுநர் உரிமம்
- பான் கார்டு .
- ஆதார் அட்டை .
- வங்கி/ தபால் அலுவலகத்தால் வழங்கப்பட்ட கணக்குப் புத்தகங்கள் .
- MGNREGA வேலைக்கான அட்டை .
- மத்திய தொழிலாளர் நல ஆணையம் வழங்கிய மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை
- புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்.
- தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு
- எம்.பி, எம்.எல்.ஏ, எம்.எல்.சிக்களின் அதிகாரப்பூர்வ அடையாள அட்டை.
- மத்திய-மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள் வழங்கிய பணியாளர் அடையாள அட்டை.
Voter Slip வாக்காளர் தகவல் சீட்டு வழிகாட்டுதலுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். வாக்குச்சாவடிகளில் அடையாளச் சான்றாக பயன்படுத்த இயலாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.