பாகிஸ்தானுக்கு இந்த 2 பேட்ஸ்மேன்கள் அச்சுறுத்தலாக இருப்பார்கள்! ஹைடன் கணிப்பு
உலகக்கோப்பை டி20 தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய அணி இரண்டு வீரர்கள் குறித்து அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 23-ஆம் திகதி உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் திருவிழா ஆரம்பமாகவுள்ளது.
இதில் இந்திய அணி வரும் 24-ஆம் திகதி தன்னுடைய முதல் ஆட்டத்தில், பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி வீரர்களான கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பாண்ட் அச்சுறுத்தல் வீரர்களாக இருப்பார் என்று மேத்யூஹைடன் கணித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், நான் ராகுலின் ஆட்டத்தை டி20 போட்டிகளில் பார்த்து வருகிறேன். அவர் குறிப்பாக இந்த குறுகிய வடிவ போட்டிகளில் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். அதே போன்று ரிஷப் பாண்ட்டின் துணிச்சலான ஆட்டம் நிச்சமாக ஒரு அச்சுறுத்தலாக பாகிஸ்தானுக்கு இருக்கும்.
ஏனெனில் அவர் எதிரில் வீசும் பந்துகளை சாதரணமாக அடிக்குகிறார் என்று கூறியுள்ளார்.