நடைபாதையில் கிடந்த மனித தலை... அலறியடித்த மக்கள்: ஜலாலாபாத்தில் தொடரும் பயங்கரம்
ஆப்கானிஸ்தானில் நடைபாதையில் மனித தலை கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. நங்கர்ஹர் மாகாணத்தின் ஜலாலாபாத் நகரிலே இச்சம்பவம் நடந்துள்ளது.
4வது மாவட்டத்தில் உள்ள அங்கூர்பாக் பகுதியின் சாலை ஓரத்தில் இருக்கும் நடைபாதையில் மனித தலை கிடந்தை பார்த்து பொதுமக்கள் அலறியடித்து ஓடியுள்ளனர்.
தலைதுண்டிக்கப்பட்ட நபர் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை என ஊள்ளுர்வாசி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நாள் முதல் நங்கர்ஹர் மாகாணத்தின் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்(கே) பொறுப்பேற்ற நிலையில், மாகாணத்தில் ஐ.எஸ்(கே) ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகளை தலிபான் அரசு தொடங்கியுள்ளது.
அதேசமயம், நாட்டில் குற்றச் செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டப்படும் நபர்களுக்கு விசாரணை ஏதும் செய்யாமல் மரண தண்டனை வழங்கும் தலிபான்கள், அவர்களின் சடலங்களை பொதுவெளியில் தொடங்கவிட்டு வருகின்றனர்.