தினமும் இஞ்சி சாப்பிடுவதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா?
நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு அற்புத பொருள் தான் இது உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு வகை மசாலாப் பொருளாகும்.
இஞ்சிக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
இது ஆன்ட்டி ஃப்பன்ங்கள், ஆன்ட்டி செப்டிக், ஆன்ட்டி பயோடிக் மற்றும் ஆன்ட்டி வைரல் பண்புகளைக் கொண்டுள்ளது. மற்றும் இதில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.
குறிப்பாக இஞ்சியை டீயாகவோ அல்லது தண்ணீரில் சேர்த்தோ குடிப்பது இன்னும் நிறைய பலன்களைக் தருகின்றது.
அந்தவகையில் தற்போது இஞ்சி சாற்றினை தினமும் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- ஒரு லிட்டர் அளவுக்குத் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதிக்கும் நீரில் இரண்டு இஞ்ச் அளவுக்கு உள்ள இஞ்சியைத் தோல் சீவி விட்டு, துருவிக் கொள்ள வேண்டும். துருவிய இஞ்சியைத் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு, பின் ஆறியதும் வடிகட்டி இந்த நீரை தினமும் குடித்து வந்தால் உடலில் நிறைய ஆரோக்கிய மாற்றங்கள் உண்டாகும்.
- தினமும் குறைந்தபட்சம் ஒரு கிளாஸ் இஞ்சி தண்ணீரைக் குடித்து வந்தால் நம்முடைய ஜீரண மண்டலம் பலப்படும். அஜீரணக் கோளாறைத் தடுப்பதோடு குமட்டல் மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றைத் தீர்க்கவும் உதவுகிறது.
- இஞ்சி தண்ணீரை தினமும் குடித்து வருவது சிறுநீரகக் கோளாறு ஏற்படாமல் தவிர்க்க உதவுவதோடு நீரிழிவையும் நீரிழிவால் ஏற்படும் விளைவுகளையும் கட்டுப்படுத்துகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்க்ரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கிறது.
- இஞ்சி தண்ணீர் அளவுக்கு அதிகமாக ஏற்படும் பசியைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. அதேபோல நாம் உண்ணும் உணவுகளில் உள்ள கொழுப்பைக் கிரகித்துக் கொண்டு, அதை உடலுக்குத் தேவையான ஆற்றலாக மாற்றுகிறது. இதனால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு எரிக்கப்பட்டு உடல் எடையைக் குறையும்.
- இஞ்சி சாறுயில் அடங்கியிருக்கும் வைட்டமின் ஏ மற்றும் சி நம்முடைய கூந்தலுக்கும் இயற்கையான பொலிவைத் தருவதோடு பொடுகை அடியோடி விரட்டி, முடி வளர்ச்சியைத் தூண்டும் தன்மையைக் கொண்டிருக்கிறது.
- இஞ்சியில் உள்ள உட்பொருள்கள் மூளையின் நரம்பு செல்கள் அழியும் செயலை மெதுவாக்குகிறது. இஞ்சியில் உள்ள இன்பிளமேட்டரி பண்பு மூளையில் ஏற்படும் நோய்த் தொற்றுக்களை எதிர்த்துப் போராடுகிறது.
- உடனடியாக தசைகளை சோர்விலிருந்து நீக்கி, உடலைப் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் உடனே ஒரு கிளாஸ் இஞ்சி தண்ணீர் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் தசைவலி பறந்து போய்விடும்.
- இஞ்சி பெருங்குடல் மற்றும் குடல் பாதிப்புகளைக் குறைக்க உதவுகிறது என்றும் அதன் விளைவாக, ஜீரண மண்டலம் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படாமல் தவிர்க்க முடியும்
- இஞ்சி சாறு நடுத்தர வயதுடையவர்களுக்கு ஏற்படும் சின்ன சின்ன ஞாபக மறதி பிரச்சினையைத் தீர்க்கக் கூடியது. இதிலுள்ள பயோ - ஆக்டிவ் மற்றும் ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் வயதாகும் போது உண்டாகிற மறதி நோயான அல்சைமர் உண்டாவதைத் தடுக்கிறது.