நாள் முழுவதும் ஜீன்ஸ் பேண்ட் அணிவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்.., என்னென்ன தெரியுமா?
கல்லூரி செல்லும் பெண்கள், அலுவலகம் செல்லும் பெண்கள் என அனைவரும் இந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்து செல்ல விரும்புகிறார்கள்.
பெண்களின் ஆடை அலங்காரத்தில் ஜீன்ஸ் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.
ஆனால், நீண்ட நேரம் இறுக்கமாக ஜீன்ஸ் பேண்ட் அணிவதால் பல்வேறு ஆரோக்கியப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அந்தவகையில், நாள் முழுவதும் ஜீன்ஸ் பேண்ட் அணிவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து பார்க்கலாம்.
ஏற்படும் பக்கவிளைவுகள்
இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் கால்கள் மற்றும் இடுப்புப் பகுதியில் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. இதனால் மரத்து போவது மற்றும் வீக்கம் ஏற்படலாம். மேலும், நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு, வேரிக்கோஸ் நோய்க்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
இதனால் தோல் மூச்சுவிடும் தன்மை குறைகிறது. வியர்வை மற்றும் பாக்டீரியாக்கள் சேர்ந்து தோல் அரிப்பு, சொறி மற்றும் பூஞ்சை நோய்கள் ஏற்பட்டு சருமத்தில் எரிச்சல் அதிகரிக்கும்.
மேலும், இடுப்பு மற்றும் முதுகெலும்பில் அழுத்தம் ஏற்பட்டு தசைகள் மற்றும் நரம்புகளில் வலியை உருவாக்கி, நாளடைவில் நிரந்தரமான முதுகுவலிக்கு வழிவகுக்கும்.
வயிற்றுப் பகுதியில் அழுத்தம் அதிகரிப்பதால் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர் வடிகுழாய்களில் தொற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. இதஹனால் UTI சிறுநீர் தொற்று ஏற்படலாம்.
வயிறு மற்றும் குடல் பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு உணவு செரிமானத்தைப் பாதிக்கும். இதனால் அடிக்கடி வயிறு உப்பசம், எரிச்சல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
மேலும், இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் பிறப்புறுப்பு பகுதியில் காற்றோட்டம் குறைகிறது. இதனால் பாக்டீரியா தொற்றுகள் ஏற்பட்ட வெஜைனல் இன்ஃபெக்ஷன்கள் மற்றும் பிறப்புறுப்பு எரிச்சலை உண்டாக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |