நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி
அமெரிக்காவில் காட்டுக்குள் கேட்ட அழுகுரலை பின்தொடர்ந்து, காணாமல் போன 4 வயது குழந்தையை பொலிஸார் பத்திரமாக மீட்டனர்.
அப்போது பொலிஸாரின் பாடிகேமில் பதிவான திக் திக் நிமிடங்களின் வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
காட்டுக்குள் சிக்கித்தவித்த 4 வயது சிறுவன்
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் உள்ள அட்லாண்டிக் சிட்டி பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு தனது வீட்டிலிருந்து வழிதவறி காணமால்போன 4 வயது சிறுவன் காட்டுக்குள் சிக்கித்தவித்த நிலையில் பொலிஸாரால் பத்திரமாக மீட்கப்பட்டான்.
சிறுவன் தனது வீட்டிலிருந்து சுமார் அரை மைல் தூரத்தில் அடர்ந்த South Jersey காட்டுக்குள் சிக்கிக்கொண்டான். அவனுக்கு பாதுக்காப்பாக அவனது கருப்பு நிற வளர்ப்பு நாய் (Labrador Retriever) இருந்துள்ளது.
New Jersey State Police
திக் திக் காணொளி
குழந்தையின் அழுகுரலையும், நாய் குறைக்கும் சத்தத்தையும் கேட்டபடி காட்டுக்குள் தீவிரமாக தேடிய மூன்று பேர் கொண்ட பொலிஸ் குழு, தூரத்தில் குழந்தை இருப்பதை கண்டுபிடித்து நெருங்கி ஓடுகின்றனர். அதன் வீடியோ காட்சி பொலிஸாரின் உடலில் பொருத்தப்பட்ட கமெராவில் பதிவானது.
"உனக்கு ஒன்றும் ஆகவில்லை நங்கள் உன்னை கண்டுபிடித்துவிட்டோம்" எனக் கூறியபடி ஒரு அதிகாரி குழந்தையை நோக்கி ஓடினார். மனிதர்களைப் பார்த்ததும், சிறுவன் அழுதுகோடி ஓடிவந்தான்.
அப்போது "என் ஒரு ஷூவைத் தொலைத்துவிட்டேன், ஷூவைத் தொலைத்துவிட்டேன்.." என்று சொல்லிக்கொண்டே பெண் பொலிஸார் ஒருவர் மீது சிறுவன் தொற்றிக்கொண்டான்.
Troopers Rescue Missing Child in the Woods
— NJSP - State Police (@NJSP) March 30, 2023
Last night, troopers from Buena Vista Station responded to the report of a missing child in Buena Vista Twp., Atlantic County.
A 4-year-old boy and his black Labrador had wandered away from his house.
Check out the rescue. pic.twitter.com/wUMrWYzuYQ
தாயிடம் ஒப்படைக்கப்பட்டார்
இயன் எம்மி என்ற அந்த பெண் பொலிஸார் சிறுவனை தூக்கி கட்டி அணைத்துக்கொண்டார். பின்னர் தாயிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சிறுவனும் நாயும் வழி தவறிய பிறகு தாய்க்கு பீதி தொடங்கியது, அருகில் இருந்த போதிலும், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவனுடைய அம்மாவால் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் பொலிஸாரின் உதவியால் கண்டுபிடிக்கப்பட்டார்.
அதிர்ச்சியடைந்தாலும், பயந்துபோன சிறுவன் உடல்ரீதியாக பாதிப்பில்லாமல் இருந்தான். அவர் எதற்காக காட்டுக்குள் சென்றார் என்பது குறித்த கூடுதல் விவரங்களை பொலிஸார் தெரிவிக்கவில்லை.
New Jersey State Police