காடு ஒன்றில் ஆடைகளின்றி கண்டுபிடிக்கப்பட்ட இளம்பெண்... பேஸ்புக் மூலம் நிகழ்ந்த திருப்பம்
கம்போடியா காடு ஒன்றில், ஆடைகளின்றி, மரங்களில் வாழ்ந்துவந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார் ஒருஇளம்பெண்.
கம்போடியாவில் காட்டில் வேலைக்கு செல்லும் ஒருவர், அடிக்கடி தனது உணவு காணாமல் போனதையடுத்து குழப்பமடைந்தார். யார் தனது உணவைத் திருடுவது என ஒருநாள் அவர் மறைந்திருந்து பார்க்க, ஆடைகள் அணியாத, அழுக்கான, உடலில் கீறல்கள் காணப்பட்ட இளம்பெண் ஒருவர் தன் உணவைத் திருடிச் சாப்பிடுவதைக் கண்டார் அவர்.
அமைதியாக அங்கிருந்து வெளியேறிய அந்த நபர், நகருக்குள் சென்று தன் நண்பர்கள் சிலரையும் உடன் அழைத்துக்கொண்டு வந்து அந்த பெண்ணை பிடித்து, அவரை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.
பேசத் தெரியாத அந்த பெண் நடப்பதற்கு பதிலாக தவழ்ந்தே சென்றிருக்கிறார். பசி வந்தால் தன் கையால் வாயைக் காட்டுவதும், யாராவது உடை அணிவித்தால் உடையை அவிழ்த்து வீசி விடுவதுமாக இருந்த அந்த பெண்ணுக்கு பிடித்த ஒரே விடயம், குழந்தைகளின் பொம்மைகள்தான்.
இப்படியிருக்கும் சூழலில், வனப்பெண் என அறியப்பட்ட அந்த பெண்ணைக்குறித்து அறிந்த ஒருவர், அது சிறு வயதில் காணாமல் போன தன் மகள் Rochom என்று கூறில் அவளது உடலில் இருந்த அடையாளங்களைக் கூறி, அந்த பெண்ணை அழைத்துச்சென்று மகளாக வளர்த்துள்ளார்.
காட்டில் 20 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த பெண் டார்சான் என்பது போல கதைகள் பரவத்தொடங்கியுள்ளன.
இதற்கிடையில், எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. வியட்நாமைச் சேர்ந்த Pel (70) என்பவர், பேஸ்புக்கில் அந்த பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, அது தன் மகள் Tak என்றும், அவளுக்கு மன நலம் சரியில்லை என்றும் கூறி, அவளது உடலில் உள்ள அடையாளங்களை சரியாக கூறியதுடன், சாட்சிக்கு 9 உறவினர்களையும், அந்த பெண்ணின் பிறப்புச் சான்றிதழ் முதலான ஆவணங்களையும் காட்ட, அதிகாரிகள் முன்னிலையில், இவ்வளவு நாள் அவரை மகளாக வளர்த்த தம்பதியர், அவரது உண்மையான பெற்றோரிடம் அவரை ஒப்படைத்துள்ளனர்.
மகளாக வளர்த்த பெண்ணை பிரிகிறோமே சோகத்தில் கம்போடிய தம்பதியரும் உறவினர்களும் அழ, மகள் கிடைத்த சந்தோஷத்தில் வியட்நாமிய குடும்பம் ஆனந்தக் கண்ணீர் விட, அங்கே ஒரே உணர்ச்சிப் பெருக்குதான்...