சிறுவர்கள் மூவரின் கொடுஞ்செயல்... பிரித்தானியாவை உலுக்கிய சம்பவத்தின் முழு பின்னணி
பிரித்தானியாவில் ஆட்டிசம் பாதித்த சிறுவனை சிறுமி ஒருவர் ஏமாற்றி தனியாக அழைத்து சென்று படுகொலை செய்துள்ள சம்பவத்தின் முழு பின்னணி வெளியாகியுள்ளது.
சுயநலம் பிடித்த ஒரு சிறுமியால் மகன் படுகொலை செய்யப்பட்டுள்ளதை தங்களால் மறக்கவும் மன்னிக்கவும் முடியாது என கொல்லப்பட்ட சிறுவனின் தந்தை நீதிமன்றத்தில் கதறியுள்ளார்.
பள்ளி மாணவன் Olly Stephens என்பவரை 14 வயதேயான சிறுமி ஒருவர் ஏமாற்றி அழைத்து சென்று சிறுவர்கள் இருவருடன் சேர்ந்து கத்தியால் கொடூரமாக தாக்கி படுகொலை செய்துள்ளார்.
சம்பவம் நடந்த பகுதியானது சிறுவன் Olly Stephens குடியிருக்கும் வீட்டுக்கு மிக அருகாமையில் என்றே தெரிய வந்துள்ளது. நட்பு பாராட்டி குறித்த சிறுமி தமது மகன் வாழ்க்கையில் நுழைந்த அந்த நாள் நாங்கள் மறக்கவே முடியாத, நடந்தவற்றை நினைத்து எப்போதும் வருத்தப்படும் நாள் என சிறுவன் Olly Stephens தந்தை கதறியுள்ளார்.
இந்த வழக்கில் சிக்கியுள்ள சிறுவர்கள் இருவரும் கொலை செய்துள்ளது நீதிமன்றத்தில் நிரூபணமாகியுள்ளது. இதனையடுத்து குறித்த 14 வயது சிறுவர்கள் இருவருக்கும் 12 மற்றும் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சிறார்களுக்கான சிறையில் அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய சிறுமிக்கு 3 ஆண்டுகளும் 2 மாதமும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.