பிரித்தானியாவில் அதிகரிக்கும் வெப்பம்... நாளை வெளியாக இருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
*பிரித்தானியாவில் வெப்பம் அதிகரித்து வருகிறது.
*வெப்பம் அதிகரிப்பு மற்றும் மழை குறைச்சல் காரணமாக நாளை முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தானியாவில் வெப்பம் அதிகரித்து வருவதுடன், மழையும் குறைவாக உள்ளதால் ஆறுகளும் குளங்களும் வறண்டுவருகின்றன.
பச்சைப் பசேல் என காட்சியளிக்கும் வயல்களும் பூங்காக்களும் காய்ந்து மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன. அதைத் தொடர்ந்து தண்ணீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள் நாளை பிரித்தானியாவில் அதிகாரப்பூர்வமாக வறட்சி பிரகடனம் செய்யப்படும் என எதிர்பார்ப்பதாக பிபிசி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
PC: Bloomberg/Getty Images
வறட்சி அறிவிக்கப்பட்டால் என்னென்ன நடக்கும்? அதிகாரப்பூர்வமாக வறட்சியை பிரகடனம் செய்யும் அதிகாரம் கொண்ட சுற்றுச்சூழல் ஏஜன்சி, தண்ணீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள் வறட்சி விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கிறார்களா என்பதை உறுதிசெய்யும்.
ஆறுகளிலிருந்து அதிக அளவில் தண்ணீர் எடுப்போர் தடுத்து தடுத்து நிறுத்தப்படுவார்கள். வீடுகளுக்கானாலும் சரி, வியாபார நோக்கத்துக்காக ஆனாலும் சரி, தண்ணீரை அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து வேறு விடயங்களுக்காக பயன்படுத்துவது தொடர்பில் தண்ணீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள் கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும் என அறிவுறுத்தப்படும்.
PC: TOBY MELVILLE/REUTERS