சொர்க்கத்தில் நடந்த திருமணம்! அந்தரத்தில் தேவதைகள்..கொந்தளித்த இணையவாசிகள்
இணையத்தில் வைரலாகியுள்ள திருமண வீடியோ ஒன்று இணையவாசிகளின் கண்டனங்களை பெற்றுள்ளது.
வைரல் வீடியோ
Pre-Wedding Photoshoot எனும் திருமணத்திற்கு முன்பு புகைப்படங்கள், வீடியோக்கள் எடுக்கப்படும் நிகழ்வு இளைஞர்கள் இடையே பிரபலமாகி வருகிறது.
நாளுக்கு நாள் இது சற்று எல்லை மீறி வருவதாக ஒருபுறம் குற்றச்சாட்டுகள் நிலவுகிறது. இதற்கு காரணம் வரம்பு மீறி தம்பதியர் செய்யும் செயல்கள் மற்றும் அணியும் உடைகள் தான்.
அந்த வகையில் தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. குறித்த வீடியோவில் மண்டபம் ஒன்றில் மக்கள் கூடியிருக்கின்றனர். அங்கு மணமக்கள் நிச்சயதார்த்தத்திற்காக மோதிரம் மாற்றிக் கொள்ள தயாராகி இருக்கிறார்கள்.
வண்ண வண்ண மலர்கள், விளக்குகளின் அலங்காரத்தினால் முழு மண்டபமே சொர்க்கத்தைப் போல் காட்சி அளித்தது. பெரிய பெரிய மரங்கள், செடிகள், கொடிகள் போன்ற அலங்காரங்கள் ஒரு பக்கமும், சிறிய பெரிய விளக்குகள் மறுபக்கமும் நீண்டு வளர்ந்து காணப்படுகின்றன.
இதற்கு மேலாக சில பெண்கள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தேவதைகள் போல உடையணிந்து காட்சி அளிக்கின்றனர்.
அவர்கள் மணமக்களுக்கு மலர் தூவி வாழ்த்துவதற்காக அவ்வாறு தொங்கவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவின் நோக்கமே வானத்து தேவதைகள் ஒன்றுகூடி மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதிப்பது தானாம்.
இணையவாசிகள் காட்டம்
ஆனால் இணையவாசிகளோ இதனைப் பார்த்து பதறிவிட்டனர். அவர்கள் மிகவும் காட்டமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
'பெண்களை இப்படியா அந்தரத்தில் மனிதாபிமானம் இல்லாமல் கட்டி தொங்கவிடுவது?' அவர்களும் மனிதர்கள்தானே? இந்த செயல் கண்டிக்கத்தக்கது. ஒரு மனிதனை ஒரு காட்சி பொருளாக கருதுவது சரியா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் இந்த ஏற்பாடு பெண்கள் மீதான வெறுப்பை உமிழ்ந்தது போல் உள்ளதாகவும், இதனை செய்தவர்கள் மனநிலை குன்றியவர்களாகதான் இருக்க முடியும் என்றும் இணையவாசிகள் விளாசியுள்ளனர்.
நிகிதா என்பவர் தான் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் Share செய்திருக்கிறார். அத்துடன் இணையவாசிகளின் கருத்துக்களுக்கு அவர் கூறிய பதிலில், 'இந்த பெண் கலைஞர்கள்; இதற்காகவே Special Training எடுத்த தொழில் வல்லுநர்கள். இதற்கு முன்பு நிறைய ஒத்திகைகள், பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டன' என கூறினார். எனினும் அவரது கருத்தினை யாரும் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |