பிரித்தானியாவில் நிறைமாத கர்ப்பிணி மாயமானதால் பதற்றம்! புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸார்
பிரித்தானியாவில் காணாமல் போன 37 வயது நிறைமாத கர்ப்பிணி பெண்ணை பொலிஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
இங்கிலாந்தின் ஸ்டாஃபோர்ட்ஷையரில் உள்ள தனது வீட்டிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் அந்த கர்ப்பிணி பெண்ணின் பாதுகாப்பு குறித்து அச்சங்கள் அதிகரித்து வருகின்றன.
எலிசபெத் கில்லிவர் (Elizabeth Gilliver) எனும் 37 வயதாகும் அப்பெண், கடைசியாக Fradley கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஸ்டாஃபோர்ட்ஷையர் பொலிஸார், அவரது காணாமல் போன பெண் தொடர்பான விசாரணைக்கு உதவுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த வேண்டுகோளின் ஒரு பகுதியாக அப்பெண்ணின் ஒரு படத்தையும் விவரத்தையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், அப்பெண் அதிக எடையுள்ள கர்ப்பிணி என்றும் அவர் எளிதாக பாதிக்கப்படக்கூடியவர் என்றும் விவரித்துள்ளனர்.
கில்லிவர், வெள்ளையாக, 5.5 அடி முதல் 5.7 அடி உயரத்துடன், நடுத்தர உடற்கட்டமைப்பு மற்றும் தோள்பட்டை நீளமுள்ள பழுப்பு நிற முடி கொண்டவர் என்று அவரது தோற்றம் விவரிக்கப்பட்டுள்ளது.
அவர் கடைசியாக அடர் நீல அடிடாஸ் ஜிப்-அப் ஜாக்கெட், வெளிர் சாம்பல் ஜாகிங் பாட்டம்ஸ் அணிந்திருந்தார் மற்றும் வெளிர் நிற கைப்பை வைத்திருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் காணாமல் போனபோது, அடிடாஸ் பேஸ்பால் தொப்பி மற்றும் கண்ணாடிகளையும் அணிந்திருக்கலாம் என்று நம்பபடுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
எலிசபெத் கில்லிவரின் இருப்பிடம் பற்றிய தகவல் தெரிந்த எவரும் ஸ்டாஃபோர்ட்ஷையர் காவல்துறையை அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.