ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்கு பெட்டிகளை எடுத்துச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் ஈரானில் பரபரப்பு!
ஈரானில் வாக்கு பெட்டிகளை எடுத்துச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் சட்டப்படி ஒருவர் இரண்டு முறை மட்டுமே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும்.
அதன்படி, ஈரானின் ஜனாதிபதியாக இரண்டாவது முறை பதவியேற்ற Hassan Rouhani-யின் பதவிக்கலாம் முடிவுக்கு வருகிறது.
ஈரானில் ஜூன் 18ம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை 90% எண்ணப்பட்டுள்ள நிலையில், வெற்றி பெறுவதற்கு தேவையான வாக்குகளை பெற்று, Raisu ஈரானின் புதிய ஜனாதிபதியாக பதிவியேற்க உள்ளார்.
எனினும், வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றும் வரும் நிலையில் Khuzestan மாகாணத்தில் வாக்கு பெட்டிகளை எடுத்துச்சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் பலியானதாவும், 11 பேர் காயமடைந்ததாக மாகாண கவர்னர் Qasem Soleimani Dashtaki தகவல் தெரிவித்துள்ளார்.
பலியானவர் வாக்கு பெட்டிகளை பாதுகாக்கும் பணிக்கான நியமிக்கப்பட்ட சட்ட அமலாக்கத்துறை அதிகாரி என Qasem Soleimani Dashtaki தெரிவித்துள்ளார்.