போதைப்பொருள் கடத்தல் கும்பலை ஹெலிகாப்டரில் உளவு பார்த்த இராணுவ வீரர்களுக்கு நேர்ந்த துயரம்! ஆற்றில் கிடந்த சடலங்கள்
பெருவில் ஹெலிகாப்டர் விபத்தில் 5 இராணுவ வீரர்கள் பலியான சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
Cusco நகரிலே இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதை பெருவின் ஆயுதப்படைகளின் கூட்டுப்படை(CCFFAA)உறுதிப்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து பெருவின் ஆயுதப்படைகளின் கூட்டுப்படை(CCFFAA) வெளியிட்ட அறிக்கையில், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் கும்பலை உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஹெலிகாப்டரே விபத்துக்குள்ளானது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் Vilcanota ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளதானது.
ஹெலிகாப்டரில் சுமார் 12 வீரர்கள் பயணித்தனர், இதில் 5 பேர் இறந்தனர், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
Unos cinco militares murieron este sábado luego de que un helicóptero del Ejército de #Peru que realizaba un operativo antidrogas, se precipitó a un río de la región andina de Cusco.
— Noticias y Tendencias (@Notytend) April 18, 2021
Dos militares se encuentran desaparecidos y cinco fueron rescatados con vida en el río Vilcanota. pic.twitter.com/nmDKh9rP2q
விபத்தில் சிக்கிய 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர், மேலும் 2 பேரை தேடி வருவருகிறோம் என (CCFFAA)உறுதிப்படுத்தியுள்ளது.