உயிர் தப்பிய ஈரான் ஜனாதிபதி., கடுமையான தரையிறக்கத்தை எதிர்கொண்ட ஹெலிகாப்டர்
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை (Ebrahim Raisi) ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் கடுமையாக தரையிறங்கியது.
ஆனால், அவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோசமான வானிலையே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
ஈரானின் அரசு நடத்தும் PressTV, சம்பவம் நடந்த இடத்தைக் கண்டறிய மீட்புக் குழுக்கள் முயற்சித்து வருவதாகக் கூறியது.
ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் ரைசி பயணம் செய்து கொண்டிருந்தது, ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோல்பாவிற்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக ஈரான் நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
ஹெலிகாப்டரில் கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் அயதுல்லா அல் ஹாஷிம் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோர் இருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் வாகனத் தொடரணியில் இருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அஜர்பைஜானில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் உடன் ரைசி அணையைத் திறந்து வைத்தார். அரஸ் ஆற்றில் இரு நாடுகளும் இணைந்து மூன்று அணைகளைக் கட்டியுள்ளன. இரு நாடுகளுக்கு இடையே சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தாலும், ரைசி அந்த நாட்டுக்கு விஜயம் செய்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Helicopter carrying Iran's president Ebrahim Raisi hard landed, Iran president Ebrahim Raisi