பயப்படுகிறாரா நெதன்யாகு... லெபனானின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவப் படைக்கு எச்சரிக்கை
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் லெபனானின் ஹிஸ்புல்லாஹ் இராணுவப் படை தவறிழைக்க கூடாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடுமையாக எச்சரித்துள்ளார்.
ஹமாஸ் படைகளுக்கு ஆதரவாக
இரண்டு வாரமாக தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் பாலஸ்தீன மக்கள் இதுவரை 4,600 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் தொடுத்த தாக்குதலில், இஸ்ரேலில் அப்பாவி மக்கள் 1,400 பேர்கள் கொல்லப்பட்டனர். அத்துடன், சுமார் 200 பேர்களை ஹமாஸ் படைகள் பணயக்கைதிகளாகவும் சிறை வைத்துள்ளது.
இஸ்ரேலுக்கு அமெரிக்க நிர்வாகம் முழு ஆதரவளித்து வருவதுடன் ஆயுதங்களையும் குவித்து வருகிறது. இதனால் பாலஸ்தீன பகுதியில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுகிறது.
@afp
இந்த நிலையில் ஹமாஸ் படைகளுக்கு ஆதரவாக லெபனானின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவப் படையான ஹிஸ்புல்லாஹ் களமிறங்கக் கூடும் என்ற தகவல் கசிந்து வருகிறது. மட்டுமின்றி, லெபனான் எல்லையில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லாஹ் படைகள் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டும் வருகின்றனர்.
பயங்கரவாத அமைப்பு
இந்த நிலையிலேயே ஹமாஸ் படைகளுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லாஹ் களமிறங்கினால் அது வாழ்நாள் தவறாக இருக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லெபனான் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய ராணுவத்தினரிடம் பேசும்போது, அவர் இந்த மிரட்டலை விடுத்துள்ளார். ஹிஸ்புல்லாஹ் களமிறங்கினால், லெபனான் மீது இஸ்ரேலின் பதிலடி உக்கிரமாக இருக்கும் எனவும், நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு பேரழிவாக இருக்கும் எனவும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
@afp
ஹிஸ்புல்லாஹ் விவகாரத்தில் நெதன்யாகு பயப்படுகிறாரா என்ற கேள்வியும் நிபுணர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லாஹ் விவகாரத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.
மட்டுமின்றி, லெபனானின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவப் படையை பிரித்தானியா மற்றும் அமெரிக்கா உட்பட பல நாடுகள் பயங்கரவாத அமைப்பு என்றே குறிப்பிட்டு தடை செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |