தலிபான் உயர் மட்டத் தலைவர் பாகிஸ்தான் நடத்திய தற்கொலை தாக்குதலில் மரணம்! உறுதிப்படுத்திய மூத்த தலிபான் உறுப்பினர்
தலிபான் உயர் மட்டத் தலைவர் ஹெய்பத்துல்லாஹ் அகுன்ஜதா, கடந்த ஆண்டு பாகிஸ்தான் படைகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக மூத்த தலிபான் உறுப்பினர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான மாகாணங்களை கைப்பற்றிய தலிபான் அமைப்பு,ஈரான் நாட்டில் இருப்பதுபோன்று ஆப்கானிஸ்தானிலும் புதிய இடைக்கால அரசாங்கத்தை அறிவித்தது.
ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசின் பிரதமராக முகமது ஹசன் அகுந்த் அறிவிக்கப்பட்டார். அதேசமயம், தலிபான்களின் உயர் மட்டத் தலைவராக ஹெய்பத்துல்லாஹ் அகுன்ஜதா அறிவிக்கப்பட்டார்.
அதாவது தலிபான்களின் உயர் மட்டத் தலைவர் ஹெய்பத்துல்லாஹ் அகுன்ஜதா, அதிபராகவோ அல்லது பிரதமராகவோ பொறுப்பேற்று அரசியல் மற்றும் மதரீதியான விவரங்களுக்கும் தலைவராக இருந்து அதிபருக்கும் அப்பார்பட்டு செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டது.
எனினும், ஹெய்பத்துல்லாஹ் அகுன்ஜதா பொது வெளியில் தோன்றாததால் அவர் குறித்த மர்மம் தொடர்ந்து நீடித்து வந்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு பாகிஸ்தானில் அந்நாட்டு படைகள் நடத்தி தற்கொலை தாக்குதலில் ஹெய்பத்துல்லாஹ் அகுன்ஜதா வீரமரணமடைந்ததாக மூத்த தலிபான் உறுப்பினர் Amir al-Mu'minin Sheikh தெரிவித்துள்ளார்.
இணையத்தில் பரவிய ஹெய்பத்துல்லாஹ் அகுன்ஜதாவின் புகைப்படம் பல ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது என நியூ யார்க் போஸ்ட்-ன் Hollie Mc Kay தெரிவித்துள்ளார்.