ஒரே நாளில் 3,000 கடந்த பாதிப்பு எண்ணிக்கை: பீதியில் ஒலிம்பிக்ஸ் நகரம்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒரேநாளில் 3,000-கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் போட்டி அமைப்பாளர்கள் பீதியடைந்துள்ளனர்.
டோக்கியோவில் பல எதிர்ப்புகளுக்கும் அதிருப்திகளுக்கும் இடையே ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஒரேநாளில் டோக்கியோவில் மட்டும் 3,177 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தொடங்கிய பிறகு ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 3,000 கடந்திருப்பது இப்போதுதான். புதனன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்புகள் புதிதாக ஏற்பட்டதால் டோக்கியோவில் மருத்துவமனைகளில் நெருக்கடி அதிகரித்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவர்களில் 169 பேர்களிக்கு இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், டோக்கியோ நகரில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட நிலையிலேயே ஒலிம்பிக் போட்டிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிகபட்ச பாதிப்பை பதிவு செய்துள்ள நிலையில், ஒலிம்பிக் போட்டிகள் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் குறைந்து பீதிதான் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.