போரும் சுனாமியும்... 2024ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? பிரபல பிரெஞ்சு ஜோதிடர் கணித்துள்ள சில்லிடவைக்கும் விடயங்கள்
நாஸ்ட்ரடாமஸ் என்னும் பிரபல பிரெஞ்சு ஜோதிடரின் கணிப்புகளுக்கு உலகமெங்கும் ஒரு கூட்டம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும், இந்த ஆண்டைக் குறித்து நாஸ்ட்ரடாமஸ் என்ன கணித்துள்ளார் என்பதை அறிய அவர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.
2024ஆம் ஆண்டு எப்படி இருக்கும்?
அவ்வகையில், 2024ஆம் ஆண்டைக் குறித்த நாஸ்ட்ரடாமஸின் கணிப்புக்கள் வெளியாகிவருகின்றன. விடயம் என்னவென்றால், அதில் கெட்ட செய்திகள்தான் அதிகம் உள்ளன என்பதுதான்.
மன்னர் சார்லசுக்கு கடினமான ஆண்டு
2024ஆம் ஆண்டு, பிரித்தானிய மன்னர் சார்லசுக்கு கடினமான ஆண்டாக இருக்கும் என கணித்துள்ளாராம் நாஸ்ட்ரடாமஸ்.
POOL/AFP via Getty Images
நாஸ்ட்ரடாமஸைப் பொருத்தவரை, அவர் யாரையும் நேரடியாக பெயர் குறிப்பிட்டு எதுவும் கூறமாட்டார். உதாரணமாக, தீவுகளின் மன்னர் கட்டாயப்படுத்தப்பட்டு வெளியேற்றப்படுவார், மன்னருக்கான அடையாளமே இல்லாத யாரோ ஒருவர் அவருக்கு பதிலாக மன்னராவார் என்று கூறியுள்ளார் அவர்.
இது, மன்னர் சார்லசையே குறிப்பதாக கூறும் நாஸ்ட்ரடாமஸின் தீர்க்கதரிசனங்கள் குறித்த புத்தகம் ஒன்றை எழுதியுள்ள ஆய்வாளரான Mario Reading என்பவர், மன்னர் சார்லஸ் மீதும் அவரது இரண்டாவது மனைவியான கமீலா மீதும் தொடர் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுவரும் நிலையில், மன்னர் பதவி விலகக்கூடும் என்கிறார்.
சர்வதேச போர்
2024ஆம் ஆண்டு, சர்வதேசப் போர் ஒன்று நடைபெறும் என கணித்துள்ளார் நாஸ்ட்ரடாமஸ். சிவப்பு எதிரி பயத்தில் வெளிறிப்போவான், பெரிய சமுத்திரம் பயத்துக்குள்ளாகும் என்று கூறியுள்ளார் அவர். சிவப்பு எதிரி என்பது சீனாவைக் குறிக்கலாம் என்றும், இந்தியப் பெருங்கடலில் போர் நடைபெறலாம் என்றும் அவரது கூற்றுக்கு அர்த்தம் கூறப்படுகிறது.
புவி வெப்பமயமாதலால் உயரவிருக்கும் கடல் மட்டம் புவி வெப்பமயமாதலால், பனிப்பாறைகள் உருகி, கடல் மட்டம் உயரும் என்றும், சுனாமி போன்றதொரு பெருவெள்ளத்தால் உணவுப்பயிர்கள் அடித்துச் செல்லப்படுவதால் மிகப்பெரியதொரு பஞ்சம் உண்டாகும் என்றும் கணித்துள்ளார் நாஸ்ட்ரடாமஸ்.
புவி வெப்பமயமாதலால் உயரவிருக்கும் கடல் மட்டம்
புவி வெப்பமயமாதலால், பனிப்பாறைகள் உருகி, கடல் மட்டம் உயரும் என்றும், சுனாமி போன்றதொரு பெருவெள்ளத்தால் உணவுப்பயிர்கள் அடித்துச் செல்லப்படுவதால் மிகப்பெரியதொரு பஞ்சம் உண்டாகும் என்றும் கணித்துள்ளார் நாஸ்ட்ரடாமஸ்.
புதிய போப்பாண்டவர்
தற்போதைய போப்பாண்டவராக இருக்கும் போப் பிரான்சிஸ் குறித்தும் கணித்துள்ளார் நாஸ்ட்ரடாமஸ். 2024இல் போப் பிரான்சிஸ் மரணமடைவார் என்றும், புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார். அவரது வார்த்தைகளில் சொன்னால், வயது முதிர்ந்த போப் ஒருவர் மரணமடைய, மற்றொரு வயதான நபர் போப்பாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறியுள்ளார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |