பிரித்தானியாவில் 20 ஆண்களிடம் தகாத முறையில்..பிரபல நடிகர் மீது பாய்ந்த வழக்கு! அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிரபல ஹாலிவுட் நடிகர் கெவின் ஸ்பேசி மீது மூன்று ஆண்களை வன்கொடுமை செய்ததாக பிரித்தானிய பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அமெரிக்கன் பியூட்டி திரைப்படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை பெற்றவர் கெவின் ஸ்பேசி. 62 வயதாகும் இவர் மீது பிரித்தானிய பொலிஸில், அடுக்கான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.
அதில், 1995ஆம் ஆண்டு மற்றும் 2013ஆம் ஆண்டுக்கு இடையில் கெவின் ஸ்பேசியை திரையரங்கில் 20 ஆண்கள் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரிடமும் கெவின் தகாத முறையில் நடந்துள்ளார்.
Photo Credit: AFP
அதனைத் தொடர்ந்து புகார்கள் குறித்து லண்டன் பொலிஸார் விசாரணையை தொடங்கினர். அப்போது மூன்று ஆண்களை கெவின் பாலியல் வன்கொடுமை செய்ததற்கான முதற்கட்ட ஆதாரங்களை பொலிஸார் உறுதி செய்தனர்.
Photo Credit: DANIEL ZUCHNIK/WIREIMAGE
அதன் பின்னர் கெவின் ஸ்பேசி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஹாலிவுட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
இந்த நிலையில் வரும் 16ஆம் திகதி லண்டன் நீதிமன்றத்தில் கெவின் ஸ்பேசி ஆஜராக வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Photo Credit: Steven Senne/AP