முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்க இந்த 2 பொருள் போதும்.., எப்படி பயன்படுத்துவது?
வயதானால் முகத்தில் சுருக்கம் விழுவது இயல்பான ஒன்று.
சுருக்கும் விழுவதற்கு அதிகமாக வெயிலில் சுற்றுவது, சருமத்தை ஒழுங்காக பராமரிப்பது பாேன்ற பல காரணங்கள் உள்ளது.
அந்தவகையில், வயதானாலும் இளமையாக இந்த 2 பொருளை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
- மஞ்சள்- 1 சிட்டிகை
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சள் சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் போல் கலக்கவும்.
பின் முகத்தை சுத்தமான நீரில் கழுவி கலந்து வைத்த பேஸ்டை முகம் மற்றும் கழுத்து பகுதியில் நன்கு தடவவும்.
இதனை 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை நன்கு கழுவிக்கொள்ளலாம்.
இதனையடுத்து ஒரு பருத்தி துணியால் முகத்தை துடைத்து இறுதியாக முகத்திற்கு மாய்ஸ்சரைசர் பயன்படுத்த வேண்டும்.
இந்த பேஸ்பேக்கை வாரத்திற்கு 2 முறைப் பயன்படுத்தி வந்தால் முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |