உடனடியாக முகத்தை பொலிவாக்க இந்த 2 பொருட்கள் போதும்.., எப்படி பயன்படுத்துவது?
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், உடனடியாக முகத்தை பொலிவாக்க இந்த 2 பொருட்களை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி மாவு- 2 ஸ்பூன்
- பச்சை பால்- 4 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் பச்சை பால் மற்றும் அரிசி மாவு சேர்த்து ஆகியவற்றை கலந்து ஒரு பேஸ்ட் தயாரிக்கலாம்.
பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் உலர விடவும்.
அடுத்து முகத்தை மெதுவாக மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
அரிசி மாவு நமது சருமத்தில் உள்ள இறந்த சரும செல்களின் அடுக்கை அகற்ற உதவுகிறது.
இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை முகப்பருக்கள் பிரச்சனையைக் குறைக்கவும், முகத்தில் உள்ள எண்ணெயைக் குறைக்கவும் உதவுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |